Saturday, January 14, 2012

கோராகு..

ஆசாரியனாகிய லேவியின் பேரன்.


முக்கிய வசனம்:

"பின்னும் மோசே கோராகை நோக்கி: லேவியின் புத்திரரே, கேளுங்கள்; கர்த்தருடைய வாசஸ்தலத்தின் பணிவிடைகளைச் செய்யவும், சபையாரின் முன் நின்று அவர்கள் செய்யவேண்டிய வேலைகளைச் செய்யவும், உங்களைத் தம்மண்டையிலே சேரப்பண்ணும்படி இஸ்ரவேலின் தேவன் இஸ்ரவேல் சபையாரிலிருந்து உங்களைப் பிரித்தெடுத்ததும், அவர் உன்னையும் உன்னோடேகூட லேவியின் புத்திரராகிய உன்னுடைய எல்லாச் சகோதரரையும் சேரப்பண்ணினதும், உங்களுக்கு அற்பகாரியமோ? இப்பொழுது ஆசாரியப்பட்டத்தையும் தேடுகிறீர்களோ?" (எண்ணாகமம் 16:8–10).


சுருக்கமான கதை:

. ஒரு லேவியன் தன்னாலேயே ஆசாரியன் இல்லை.
. பொறாமையால் தூண்டப்பட்டு மோசேக்கு எதிராக ஒரு கட்சியைத் துவக்கினான்.
. அவனுடைய குறையுள்ள தீர்மானிக்கும் திறமையால் தன் வேலையையும், சேவை செய்யும் நிலைமையையும், தன் உயிரையும் இழந்தான்.
. அவன் பேராசையே அவனுடைய அழிவுக்குக் காரணம் ஆயிற்று.


1. முன்னுரை: கோராகின் கதை.

கோராகு என்ற பெயருக்கு வழுக்கை என்று பொருள். யாத்திரையின் காலத்தில் கோராகு ஒரு புகழ் பெற்ற, மிகுந்த செல்வாக்கு பெற்ற தலைவனாய் இருந்தான். இஸ்ரவேலின் முக்கியமான மனிதர்களுள் ஒருவனாக அவன் குறிப்பிடப்பட்டுள்ளான் (யாத்திராகமம் 6). ஆண்டவருடைய ஆசரிப்புக் கூடாரத்தில் சிறப்பான சேவை செய்ய நியமிக்கப்பட்ட முதல் லேவியரில் கோராகும் ஒருவன்.

கோராகு லேவியின் குமாரரில் ஒருவன். ஆனால், அவன் தன் உறவினராகிய மோசே, ஆரோன் ஆகியோரின் அதிகாரத்தைக் கண்டு பொறாமைப்பட்டு, அவர்களுக்கு எதிராக ஒரு கட்சியைத் துவக்கினான். தாத்தான், அபிராம் ஆகியோரையும், லேவியரில் முக்கியமான 250 பேரையும் தன்னுடன் சேர்த்துக்கொண்டான் ( எண்ணாகமம் 16). அவனும், அவனைப் பின் பற்றியவர்களும் ஒரு பூகம்பத்தில் சிக்கி, தீயிலே அழிந்து போனார்கள்.


ஒரு லேவியனாக கோராகு ஆசரிப்பு கூடாரத்தின் தினசரி வேலைகளில் உதவி செய்தான். ஆண்டவருக்கெதிராக இஸ்ரவேல் மேற்கொண்ட பெரிய கிளர்ச்சிக்குப் பிறகு (எண்ணாகமம் 13:14), கோராகு தன்னுடைய சிறிய கிளர்ச்சியைத் தொடங்கினான். குறைகளைக் கேட்கும் ஒரு செயற்குழுவை ஆரம்பித்து மோசேயையும் ஆரோனையும் எதிர்கொண்டான். அவர்களுடைய குறைகளின் பட்டியலை இந்த மூன்று வாக்கியங்களில் அடக்கலாம்:


1. நீ மற்ற யாரையும் விடச் சிறந்தவன் இல்லை.
2. இஸ்ரவேலில் உள்ள ஒவ்வொருவரும் ஆண்டவரால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
3. நாங்கள் உமக்குக் கீழ்ப்படியத் தேவையில்லை.

கோராகு முதல் இரண்டு வாக்கியங்களையும், தவறான முடிவை எடுப்பதற்காக தனக்குத் தேவையானபடி மாற்றிக்கொண்டான்.

அனைத்து இஸ்ரவேலரும் வழி நடத்துவதற்காகத் தேர்ந்தெடுக்கப்படவில்லை. கோராகின் மறைவான கோரிக்கை: " வழி நடத்திச் செல்வதற்கு மோசேக்கு இருந்த எல்லா உரிமையும் எனக்கும் உண்டு" என்பதுதான்.அவனுடைய இந்தத் தவறு அவனுடைய வேலையையும், சேவை செய்யும் நிலைமையையும் மட்டுமல்லாமல், அவனுடைய உயிரையும் இழக்கச் செய்தது.

ஆண்டவருடைய வார்த்தையின் ஒரு பாகத்தை மட்டும் நம்முடைய தேவைக்கு ஆதரவாகப் பயன் படுத்தக் கூடாது என்று நாம் எச்சரிக்கபட்டிருக்கிறோம். நம்முடைய ஆசைகளை உருவகப்படுத்த அவர் வார்த்தையை முழுமையாக அனுமதிக்க வேண்டும். பதவியிலும், அதிகாரத்திலும் நாம் திருப்தி அடையக்கூடாது. நம்முடைய பதவியின் மூலமாக நம்மைப் பயன்படுத்த ஆண்டவர் விரும்பக் கூடும்.


2. கோராகின் வாழ்க்கையிலிருந்து பாடங்களை நாம் எவ்வாறு புரிந்து கொள்ளலாம்?

ஆண்டவர் தன்னை வைத்திருக்கும் அந்த முக்கியத்துவமுள்ள பதவியைப் புரிந்து கொள்ள கோராகு தவறி விட்டான். அவனுடைய போராட்டம் மோசேக்கு எதிராக அல்ல அவனைவிட மிகப் பெரியவரான ஒருவருக்கு ( ஆண்டவர்) என்பதை மறந்து விட்டான். அவனுடைய பேராசை அவன் பகுத்தறிவைக் குருடாக்க அனுமதித்தான்.


3. முடிவுரை:

சில நேரங்களில் குறிக்கோளுக்கும் பேராசைக்கும் இடையே ஒரு மிக மெல்லிய கோடே உள்ளது. நம்மிடம் இருப்பதைக் குறித்து நாம் திருப்தி இல்லாதவர்களாக இருந்தால், இருப்பதையும் நாம் இழக்க நேரிடும்.


4. வேத ஆதாரங்கள்:

கோராகின் கதை எண்ணாகமம் 16:1–40 வசனங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. எண்ணாகமம் 26:9; யூதா 11 லும் சொல்லப்பட்டிருக்கிறது. அவனுடைய சந்ததியார் பாடகர்களின் சங்கம் ஒன்றை ஆரம்பித்து இருக்கக்கூடும். ஏனெனில், சில சங்கீதங்களின் தலைப்புகளில் அவர்களைப்பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. (எ.கா. சங்கீதம் 87, 88).


5. விவாதத்துக்குரிய கேள்விகள்:

5.1 கோராகு யார்?
5.2 அவன் எவ்வளவு நல்லவன்?
5.3 மோசேக்கு எதிரான அவனுடைய குற்றச்சாட்டுகள் என்ன?
5.4 அவனுடைய வீழ்ச்சிக்குக் காரணம் என்ன?
5.5 அவனுடைய வாழ்க்கையில் இருந்து நாம் கற்கும் பாடம் என்ன?
5.6 உங்கள் ஆலயத்தில் ஒற்றுமையின்மைக்குக் காரணங்கள் என்ன?

பர்த்தொலொமேயு ..

கிறிஸ்துவின் அப்போஸ்தலர்களில் ஒருவன்

கரு வசனம்
அவர்கள் அங்கே வந்தபோது மேல்வீட்டில் ஏறினார்கள்; அதில் பேதுருவும், யாக்கோபும், யோவானும், அந்திரேயாவும், பிலிப்புவும், தோமாவும், பர்த்தொலொமேயும், மத்தேயும், அல்பேயுவின் குமாரனாகிய யாக்கோபும், செலோத்தே என்னப்பட்ட சீமோனும், யாக்கோபின் சகோதரனாகிய யூதாவும் தங்கியிருந்தார்கள். அப்போஸ்தலர் 1:13

சுருக்கத்திரட்டு
• இயேசுவின் சீடர்கள் பன்னிருவருள் அறியப்படாத ஒரு சீடன்.
• இவன் தொலொமேயுவின் குமாரன். தொலொமேயு என்பதற்கு உழவன் என்பது பொருள். பர்த்தொலொமேயு என்பதற்கு தொலொமேயுவின் மகன் என்று பொருள்படும். தொலொமேயு என்றால் போர்வீரன் என்பது பொருள்.
• இயேசுவின் சீடர்களில் ஒருவன் இவனை இயேசுவிடம் அழைத்து வந்திருக்கலாம்.
• பர்த்தொலொமேயு இந்தியாவில் மிஷனரியாக பணியாற்றியபோது இரத்த சாட்சியாக மரித்தார் என்கின்றனர்.

1.அறிமுகம் - இவனது கதை
மேற்கு மலேசியா மறை மாவட்டம் மற்றும் சிங்கப்பூர் மறை மாவட்டம் ஆகிய இவ்விரண்டும் பரி.பர்த்தொலொமேயுவின் நாளில் நிறுவப்பெற்றது. நம்முடைய முதல் பேராயராகிய பெர்குசன் டேவி 1909 வருடம் பேராயராக நியமனம் பெற்றார். இவரது ஓய்வுக்கு பின், இவர் ஆபிரிக்கா செல்வதற்கு முன்னர், ஹிந்தி மொழியைப் பயின்று இந்தியாவில் மிஷனரியாக பணியாற்றினார்.

2.யார் இந்த பர்த்தொலொமேயு?
இயேசு கிறிஸ்துவின் 12 சீடர்களில் ஒருவன். இவன் பர்த்தொலொமேயு என அழைக்கப்பட்டான். சிலர் இவனை யோவான் 1ஆம் அதிகாரத்தில் காணப்படுகிற நத்தானியேல் என கருதுகின்றனர். இயேசு தண்ணீரை திராட்சைரசமாக மாற்றிய, கலிலேயாவில் உள்ள கானா ஊரைச் சேர்ந்தவன். இந்தத் தண்ணீரைப் போல பர்த்தொலொமேயுவும் மாற்றம் பெற்றான். அர்மேனியா மற்றும் இந்தியா ஆகிய இத்தேசங்கள் இவனுடைய பணித்தளங்கள் என கூறப்படுகிறது. இவன் இரத்த சாட்சியாக மரித்த பின்பு தலைகீழாக சிலுவையில் அடிக்கப்பட்டான் என்று கூறுகின்றனர். இது சீஷத்துவத்துக்குக் கொடுக்கப்படுகிற மதிப்பு எனலாம். அநேகருக்கு இந்த சீஷத்துவம், இயேசுவின் சீடனாக இருத்தல், இரத்தசாட்சியாக மரித்தல் ஆகிய இவைகளின் மதிப்பு தெரிவதில்லை.

3. நாம் பர்த்தொலொமேயுவிடம் கற்றுக்கொள்வது என்ன?
பர்த்தொலொமேயுவின் வாழ்க்கையில் குறைந்தது 3 பெரிய கவலைகள் இருந்திருக்கக் கூடும். அவையாவன
(i) சீஷத்துவம் - ஒரு மாணவனாக இருப்பது
(ii) அப்போஸ்தலத்துவம் - மக்களிடத்திற்கு அனுப்பப்படுபவன்
(iii) இரத்த சாட்சியாக மரித்தல் - பாடு அனுபவித்து பலியாதல்
இந்த மூன்றும் மலேசியாவிலும் மற்ற நாடுகளிலும் தேவனுடைய சபையின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் அத்தியாவசியமான ஒன்றாகும்.

(i) சீஷத்துவம் :
பர்த்தொலொமேயு இயேசுவின் 12 அப்போஸ்தலர்களில் ஒருவன் என மத்தேயு 10:3 நமக்கு உறுதிப்படுத்துகிறது. இயேசு இவனைத் தெரிந்துகொள்ளும்போது ஒரு மாணவனாக (சீஷனாக) இருக்கும்படித்தான் இவனை அழைக்கிறார். SIKH என்றால் என்னவென்று நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? சான்ஸ்கிரிட் (Sanskrit)) மொழியில் இதன் பொருள் மாணவன் என்பதாகும். இயேசுவின் மாணவன் அல்லது சீஷன் என்பது வாழ்க்கை முழுவதற்குமான தொழில் போன்றது. இயேசுவின் சீடர்கள் இயேசுவின் குழுவோடு இருந்தனர். நமக்க குருவானவரும் இயேசு தான். நெருங்கிய உறவு அதிகம் கற்க உதகிறது. சுவிசேஷத்தை அறிவிக்கிறவனாயும் அதன்படி நடக்கிறவனாயும் இருக்கிற அப்போஸ்தலனாக இருப்பதே நம்முடைய பணிகளில் ஒன்று. அப்போஸ்தலனாவதற்கு முன்பு தேவனின் வார்த்தைகளை கற்றறிந்து பரிசுத்த ஆவியின் கண்காணிப்பில் நடத்தப்படவேண்டும். ஒரு கிறிஸ்தவன் கர்த்தருடைய ஆயுதமாகிய அவருடைய வார்த்தையையும் பரிசுத்த ஆவியையும் தரித்திருக்க வேண்டும். நம்முடைய முதன்மைப்பணி என்னவெனில் கிறிஸ்துவின் சீடனாக அல்லது மாணவனாக இருப்பதே (முரிட் / சீக்). இது வாழ்கை முழுவதற்குமான ஒரு பணி. இயேசு எப்போதும் எங்கேயும் அவர்களுடைய சூழ்நிலையை கருதாது தம்மைப் பின்பற்றும்படி அழைக்கிறார்.

(ii) நம்முடைய இரண்டாவது நோக்கம் கிறிஸ்துவின் அப்போஸ்தலனாதல்
இயேசு தேவனுடைய மிஷனரியாக பூமியிலிருந்து இவ்வாறு சொல்லுகிறார் “பிதா என்னை அனுப்பினது போல நானும் உங்களை அனுப்புகிறேன்” (யோவான் 20:21). அவர் நமக்கு வல்லமையும் அதிகாரமும் கொடுத்து அனுப்புகிறார். (மாற்கு 6:7-8 & 12). இந்த அப்போஸ்தலர்கள் தங்கள் வீடுகளை விட்டு அனைவரும் தேவனிடத்தில் திரும்புங்கள் என்று கூற ஆரம்பித்தனர். இந்த கிறிஸ்தவ சாட்சியின் ஊழியத்திலே எப்பொழுதும் புறக்கணிக்கும் சாத்தியங்கள் உள்ளன. அதற்கு நாம் ஆயத்தமாயிருக்க வேண்டும்.
நமக்கு வளருகின்ற சபைகளும் பராமரிக்கின்ற சபைகளும் உள்ளன. வளர்கின்ற சபையானது அனுப்புகின்ற சபையாகவும் காணப்படுகிறது.

(iii) இரத்த சாட்சியாக மரித்தல்
நம்முடைய மூன்றாவது கவலையானது இரத்த சாட்சியாக மரித்த பர்த்தொலொமேயு பற்றினது. இரத்த சாட்சி என்ற வார்த்தையின் பொருள் சாட்சியாதல் என்பதாகும். இரத்த சாட்சிகளினுடைய இரத்தமானது “சபையின் விதை” என சபையின் மிஷனரி ஊழியங்களைக் குறித்து ஆராய்ச்சி செய்கின்ற (missiologist) ஒருவர் கூறுகின்றார். மலேசியாவிற்கு நம்பிக்கையான, அற்பணிக்கக் கூடிய, பலியாகக்கூடிய கிறிஸ்தவ மிஷனரிகள் தேவைப்படுகிறார்கள்.

4. வேதாகமக் குறிப்புக்கள்
சுவிசேஷங்களும் அப்போஸ்தலர் நடபடிகளும் பர்த்தொலொமேயுவைக் குறித்து அறிய உதவுகின்றன.

5. கலந்தாலோசனைக்கான கேள்விகள்
5.1 சீஷத்துவம், அப்போஸ்தலத்துவம் மற்றும் இரத்த சாட்சி இவைகளின் பொருளை மேற்குறியிட்டு காட்டு.
5.2 மலேசியா மற்றும் சிங்கப்பூர் மண்டலங்கள் எப்போது ஆரம்பமாயின?
5.3 இந்த மண்டலத்தின் முதல் பேராயர் யார்?
5.4 பர்த்தொலொமேயு எப்படி இரத்த சாட்சியாக மரித்தான்?
5.5 நாம் எவ்வாறு மிஷனரிகளுக்கு உதவ முடியும்?

கிதியோன்..

இஸ்ரவேலின் ஜந்தாவது நியாதிபதியும், ஓர் இராணுவ போர் வியூகம் (அ. போர் தந்திரி) வகுப்பாளனும் ஆவான்.

கருவசனம்
15 அதற்கு அவன்: ஆ என் ஆண்டவரே, நான் இஸ்ரவேலை எதினாலே ரட்சிப்பேன்; இதோ, மனாசேயில் என் குடும்பம் மிகவும் எளியது; என் தகப்பன் வீட்டில் நான் எல்லாரிலும் சிறியவன் என்றான்.
16 அதற்குக் கர்த்தர்: நான் உன்னோடேகூட இருப்பேன்; ஒரே மனுஷனை முறிய அடிப்பதுபோல நீ மீதியானியரை முறிய அடிப்பாய் என்றார்.
(நியாயாதிபதி 6:15, 16)

கதைச் சுருக்கம்
• நியாதிபதியாகிய இவன் இஸ்ரவேலை நாடோடி ஜனமாகிய மீதியானியரிடத்திலிருந்து கடாச்சித்தவன்.
• கிதியோன் என்ற பராக்கிரமசாலி எப்படிப் பட்டசவால்களையும் சர்வசாதாரனமாக சமாளித்து விடுகிறவன்.
• கிதியோனை நெற்கதிர்களைத் தரையில் அடித்துக் கொண்டிருக்கும் பொழுது யெகோவா தேவன் அழைத்தார்.
• மீதியானியரின் இராணுவத்தை ஜெயங் கொண்டவன்.

முன்னுரை
யெகோவா தேவன் சர்வ சாதாரன ஜனங்களைக் கொண்டு அவரின் திட்டத்தை நிறைவேற்ற முடியும். ஏன்? உங்களையும் என்னையும் கூட அவர் பயன்படுத்துவார். நாம் நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள எப்படிப் பட்ட ஊழியமாயிருந்தாலும் சரி, அதைக் கண்ணும் கருத்துமாயும் மிகவும் துல்லியமாயும் செய்திட வேண்டும்.

கிதியோன் என்றால் ‘பதரை தூற்றுகிறவன்‘ அல்லது ‘போர் அடிக்கிறவன்‘ என்று பொருள்படும். கிதியோன் மனாசே கோத்திரத்தானும், யோவானின் மகனும் ஆவான். அவனை ‘யெருபாகால்‘ (நியா.6:32) என்றும், ‘எருப்பேசேத்‘ (2சாமு.11.21) என்றும் அழைத்த்துண்டு.

யெகோவா தேவனின் அழைப்பு மிகவும் பிரமிக்க வைக்கிற விதமாக கிதியோனுக்கு உண்டானது. ஏழு வருடங்கள் மிகவும் கஷ்டப்பட்ட இஸ்ரவேல் ஜனங்களை மீதியானியரிடமிருந்து இரட்சிக்க, கிதியோன் யெகோவா தேவன் தெரிந்து கொண்டார். கானான் தேசத்தில் வசித்த இஸ்ரவேல் ஜனங்களின் நெல் விளைச்சள்களையும் ஆடு மாடுகளையும், மிகவும் ஈவு இரக்கமற்ற முறையில் வாரிக் கொண்டு மீதியானியர் வருடா வருடம் சென்றார்கள். கிதியோனின் போர் வியூகம் வகுத்து, மீதியான் ஜனங்களிடம் இரவு வேளையில், பாளையில் பயங்கர பயணத்தை மூட்டி, கட்டுக்கோப்பில்லா இராணுவ வீர்ர்களை விரட்டியடித்தான். திடீர் என்று தீவெட்டியின் வெளிச்சமும், பல முறை எதிரொலிக்கும் எதிரொலியும் முந்நூறு பேர்களின் எக்காள தொனியும் கடுங் கலக்கத்தையும் பலத்தையும் தீதியானியரின் படையினரிடம் உண்டாகி, தாங்களுக்குள்ளே ஒருவரோடு ஒருவர் வெட்டிக் கொண்டு தோற்றுப் போய் விரட்டியடிக்கப்பட்டனர். கிதியோன், இஸ்ரவேலை 50 ஆண்டுகள் நியாயம் விசாரித்தான். அவன் ஐந்தாவது நியாதிபதியும் கூட, கிதியோன் இஸ்ரவேலின் ராஜாவாக தாம் நியமிக்கப்படுவதை விரும்பவில்லை. நாளடைவில் கிதியோன் விக்கிர ஆராதனைக்குத் தன்னை ஒப்புக் கொடுத்து, தனக்கும் தன் குடும்பத்திற்கும் கன்னியையும் கேடையும் வரவழைத்துக் கொண்டான். இருந்த பொழுதும் அவன் எபிரேயர் 11.32ல் பெருமையாய் மதிக்கப்பட்டு எழுதப்பட்டுள்ளது (நியா.6:14-27); 8:1-24ஐ வாசிக்கவும்).

கிதியோனின் கதையை ஆராய்ந்து பர்ர்ப்போம்.
a. கிதியோனின் தினசரி சவால், தன் குடும்பத்திற்கு உணவை சேகரிப்பதாகும். மீதியான் ஜனங்கள் இஸ்ரவேல் ஜனங்களின் விவசாயத்திற்குப் பெருந் தடையாய் விளங்கினார்கள்.
b. கிதியோன் பராக்கிரமசாலி ஆவான். மேல் கூறப்பட்ட சவாலை சமாளிக்க தன்னுடைய நெற்கதிர்களைப் போரடிக்க, திராட்சரச ஆலையையே போரடித்தான்.
c. யெகோவா தேவன் தன்னுடைய தூதனோடு தன்னுடைய சவால் மிக்க செய்தியைக் கொடுக்க கிதியோன் தன் நெற்கதிர்களைத் திராட்சரச ஆலையினுள் போரடித்துக் கொண்டிருக்கும் போது அனுப்பினார்.
d. தேவ தூதன் மூன்று முறை கிதியோனின் தட்டிக்கழித்தலை சமாளித்து அவனைச் சம்மதிக்க வைக்கிறார்.
- கிதியோன் தன் குடும்பத்தின் ஜீவனை அம்ச காரியங்களைக் குறித்து அக்கறையும் கரிசனையும் உள்ளவனாயிருந்தான்.
- யெகோவா தேவனின் அழைப்பைக் குறித்து அவனுக்கு சந்தேகம் இருந்தது. அவ்வழைப்பை ஏற்க மறுத்து விட்டான்.
- தனக்குக் கொடுக்கப்பட்ட ஊழியத்தைச் சரிவர செய்ய முடியாமல் போய் விடுமோ என்ற உணர்வின் நிமித்தம், யெகோவா தேவனின் அழைப்பை ஏற்க மறுத்து வட்டான்.
e. கிதியோனுக்கு பெலவீனங்களும் தோல்விகளும் ஏற்பட்டதுண்டு. இருப்பினும் அவன் யெகோவா தேவனுக்குக் கீழ்ப்படிந்து, அவன் தன் கரங்களில் ஒப்படைக்கப்பட்ட ஊழியங்களைச் செம்மையாய் செய்திட்டான்.

4. கற்றுக் கொண்ட பாடங்கள
1. யெகோவா தேவன், தற்போது நம்மிடம் இருக்கும் சொற்ப கீழ்ப்படிதலின் மத்தியிலிருந்து நம்மை அழைக்கிறார். நாம் அவ்வழைப்பை ஏற்று உத்தமும் உண்மையுமாயிருப்பின் மேன்மேலும் பொறுப்புகளைத் தருவார்.
2. யெகோவா தேவன் தமக்குள் தேங்கியிருக்கும் (அல்லது புதைந்திருக்கும்) அபரிவிதமான ஆற்றலைப் பயன்படுத்தி, மென்மேலும் வலுப்பெற செய்து அதைப் பெருகச் செய்கிறார்.
3. யெகோவா தேவன் நம்முடைய தோல்வி மற்றும் இயலாமையின் மத்தியிலும் நம்மைப் பயன்படுத்துகிறார்.
4. எப்படி நாம் ஆவிக்கரிய வாழ்க்கையில் முன்னேற்றம் அடைந்தாலும் நாம் இடரி விழுவதற்கு ஏராளமான வழிகளுள்ளது. ஆகவே, நாம் எப்பொழுதும் யெகோவா தேவன் அழைப்பைப் பின்பற்ற வேண்டும்.


5. தேவாகம மேற்கோள்கள்
நியாயாதிபதிகள் 6-8; எபிரேயர் 11:32

6. தியானித்து உரையாடல் கேள்விகள்.
6.1. ஏன் கிதியோனுக்கு விசுவாச வீரர்கள் மத்தியில் ஓர் இடம் கொடுக்கப்பட்டுள்ளது?
6.2. கிதியோனின் பெலவீனங்கள் யாவை?
6.3. கிதியோனின் வாழ்க்கையிலிருந்து நீ கற்றுக் கொண்ட பாடங்கள் யாவை?

ஆபகூக் தீர்க்கதரிசி.

கரு வசனம்
2 கர்த்தாவே, நீர் வெளிப்படுத்தினதை நான் கேட்டேன், எனக்குப் பயமுண்டாயிற்று; கர்த்தாவே, வருஷங்களின் நடுவிலே உம்முடைய கிரியையை உயிர்ப்பியும், வருஷங்களின் நடுவிலே அதை விளங்கப்பண்ணும்; கோபித்தாலும் இரக்கத்தை நினைத்தருளும். (ஆபகூக் 3:2)

கதைச் சுருக்கம்
• ஆபகூக் அநீதியைக் கண்டு சகிக்கக் கூடாதவனாயிருந்தான்.
• ஏன் அநீதிக்காரன் வெற்றிப் பெற்றவனாய் தோன்றுகிறான் என்று கேள்வி கேட்டவன்.
• யெகோவா தேவன் ஆபகூக்கை அக்கேள்விகளுக்குப் பதில்களை எழுதச் சொன்னான்.
• நீதியுள்ள யெகோவா தேவன் மேல் நித்தமும் விசுவாசம் வைக்க வேண்டும்.

1. முன்னுரை – அவனின் கதை
‘ஆபகூக்’ என்பது ‘மல்யுத்த வீரன்’ அல்லது ‘அனைப்பவன்‘ என்ற பொருள்படும். அவனைப் பற்றி பின்னனியோ குணாதிசயங்களோ அவ்வளவோ தெரியவில்லை. ஆபகூக் அசீரியாவைக் குறித்து ஏதும் குறிப்பிடவில்லை. ஆனால், கல்தேயர்களைப் பற்றியும் அவர்களுடைய பெருகுகிற இராணுவ பெலன்களைக் குறித்து குறிப்பிட்டுள்ளான். ஆகவே, அவன் நேபுகாத்நேச்சார் (1:6, 2:3) யூதேயாவை, தாக்கும் நாட்களுக்கு முன்பாக அவன் தீர்க்கதரிசனம் உரைத்தான் என்று தெரிகிறது. அக்காலக் கட்டத்தில் யோயாக்கீம் யூதேயாவை அரசாண்ட காலக்கட்டம் என்று உணரலாம்.

எதற்காக இப்புத்தகம் எழுதப்பட்டது?
இவ்வுலகத்தில் துன்மார்க்கன் ஜெயம் கொண்டவனாய் சாட்சியளித்தாலும் யெகோவா தேவன் இவ்வுலகைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளார் என்று உணர்த்த எழுதப்பட்டுள்ளது. கிமு612 முதல் கிமு 588வரை எழுதப்பட்ட இப்புத்தகம், தென் தேசமான யூதேயாவுக்கும் மற்றும் உலகமெங்கும் உள்ள யெகோவா தேவனுடைய பிள்ளைகளுக்கு எழுதினான். இப்புத்தகத்தின் நோக்கம் பின்னணியில் வளர்ந்து வரும் பாபிலோனிய உலகம் ஆதிக்கமும் அது ஏற்படுத்தப்போகும் அழிவையும் யூதேயா உணர்ந்து தன்னை தற்காத்துக் கொள்ள எத்தனிக்க வேண்டும் என்ற கரிசனைத்தான். ஆபகூக் இப்புத்தகத்தை எழுதினான்.

ஆபகூக் எல்லா கேள்விகளுக்கும் பதில்களைத் தேடினவன். சுற்றிலும் காணப்படும் நிகழ்வுகளைக் கண்டு மிகவும் கடினமாக கேள்விகளைக் கேட்டு விடைகளைத் தேடிக் கொண்டிருந்தான். இவைகள் வெறுமனே அறிவுப்பூர்வமான கேள்விகளோ அல்லது கசப்பான முறையீடோ அல்ல. ஆபகூக் மாண்டுபோகும் உலகத்தைக் கண்டு மணமுடைந்து போனான். ஏன் இவ்வுலகத்தில் இவ்வளவு அநீதி, பொல்லாப்பு என்று கேட்டான். ஏன்? எப்பொழுதும் துன்பமார்க்கன் ஜெயம் கொள்ளுகிறான்?. இக்கேள்விகளை நேராக, யெகோவா தேவனிடமே கேட்டான். யெகோவா தேவனோ சாட்சியோடே பதில்களைத் தந்தார்.

ஆபகூக்கிக் கேள்விகள் ஆபகூக்கின் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது.

மல்கியா தீர்க்கதரிசி..

கருவசனம்
1 இதோ, சூளையைப்போல எரிகிற நாள் வரும்; அப்பொழுது அகங்காரிகள் யாவரும் அக்கிரமஞ்செய்கிற யாவரும் துரும்பாயிருப்பார்கள்; வரப்போகிற அந்த நாள் அவர்களைச் சுட்டெரிக்கும்; அது அவர்களுக்கு வேரையும் கொப்பையும் வைக்காமற்போகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். 2 ஆனாலும் என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள்மேல் நீதியின் சூரியன் உதிக்கும்; அதின் செட்டைகளின்கீழ் ஆரோக்கியம் இருக்கும்; நீங்கள் வெளியே புறப்பட்டுப்போய், கொழுத்த கன்றுகளைப்போல வளருவீர்கள். (மல்கியா 4:1-2)

கதைச் சுருக்கம்
• கடவுள் என்றும் மாறாதவர் என்று உரைத்தான்.
• ஜனங்களின் பாவங்களை உணர்த்தினான் (தசம பாகம்).
• ஜனங்களுக்கு நம்பிக்கையும் பாவ மன்னிப்பையும் குறித்து பிரசங்கித்தான்.
• மனமாறி கடவுளிடம் திரும்புக என்று பிரசங்கித்தான்.

1. முகவுரை – அவன் கதை
‘மல்கியா’ என்றால் ‘என்னுடைய தூதன்’ அல்லது ‘யெகோவாவின் தூதன்’ என்று பொருள்படும் (1:1) ஜேரோம் என்பவர் அவரை எஸ்ரா என்று கூறுகிறார். கி.மு.430 காலக்கட்டத்தில் வாழ்ந்த மற்ற தீர்க்கதரிசிகள் ஆகாய், சகரியா மற்றும் நெகேமியா போன்றவர்களின் காலத்தில் வாழ்ந்தவன். ஆலயம் எழும்பி 100 ஆண்டுகள் ஆகியும் மக்கள் அல்லது ஜனங்கள் யெகொவா தேவனைத் தொழுது கொள்வதில் உற்சாகம் இழந்தும், ஏசயா மற்றும் தீர்க்கதரிசிகளின் மேசியாவின் தீர்க்கத்தரிசனங்களைக் குறித்தும் குழப்பம் அடைந்து வாழ்ந்து கொண்டிருந்தார்கள். கி.மு.586ல் எருசலேம் தேவாலயம் அழிக்கப்பட்ட காலத்தில், அநேக ஜனங்கள் யூதேயா தேசத்தில் என்ன என்ன பாவங்களைச் செய்து கொண்டு இருந்தார்களோ அதே பாவங்களை மீண்டும் செய்து கொண்டு வந்தார்கள். மல்கியா ஜனங்களின் பாவங்களையும் போலியான வாழ்க்கை முறைகளையும் கண்டித்து நீதியான யெகோவா தேவனும் கடின இருதயமுள்ள மக்கள் உரையாடுவது போல் பிரசங்கித்தான்.

பின்னணி என்ன?
மல்கியா, ஆகாய், செஜரியா தீர்க்கதரிசிகள் சிறையிருப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட யூதேயா நாட்டு தீர்க்கதரிசிகள் எருசலேம் தேவாலயம் கட்டப்படுவதில் சுணக்கம் ஏற்பட்டதால் ஆகாய் மற்றும் செவறியா தீர்க்கதரிசகள் கண்டித்தனர். ஜனங்ள் ஆலயத்தைக் கவனிக்காமல் விட்டு விட்டதையும் போலியான ஆராதனை மேற்கொண்டதையும் மல்கியா கண்டித்துத் தட்டிக் கேட்டான்.

மல்கியா, மக்களை தாங்கள் செய்த பாவங்களுக்குக் கடவுளிடம் மன்னிப்பைத் தேடச் சொல்லி கண்டித்தான். கடவுளிடம் உண்மையாய் இருப்பது முக்கிய அக்கறையாகும். அவர்கள் கடவுளிடம் உண்மையில்லாதவர் ஆவார்கள். மல்கியாவிடம் ஒரு சிறந்த எதிர்காலம் இருந்த்து.

(எகா.) மல்.3:7-8, கடவுள் கூறினார், என்னுடன் திரும்பு; நான் உன்னுடன் திரும்புகிறேன் என்று யெகோவா தேவன் கூறுகிறார். ஆனால், ‘எப்படி நாங்கள் திரும்புவோம்?‘ என்று மக்கள் கேட்கின்றனர்,.

அவரின் போதனை
கடவுளின் அன்பு ஒழுக்கமானது மற்றும் முழுமையானது. யெகோவா தேவனின் அன்பு செயல்பாடும் அன்பு மற்றும் பாதுகாப்பும் ஆகும். அவர் உண்மையானவர். அவர் உண்மையாக மக்களுக்கு சத்தியம் செய்பவர். ஜனங்கள் அன்பான யெகோவா தேவனை பெருமை நிமித்தம் ஏற்றுக் கொள்ளாமல் உடன் படுக்கையை மீறி அந்நிய தெய்வங்களைப் பின்பற்றி தங்கள் சுயநலத்திற்காக வாழ்ந்தார்கள். அதனால் அவர்களின் தொடர்பு முறிந்து போனது.

ஆனால், இந்த மீறுதல்கள் மாற்றப்படக் கூடியவை. எல்லா நம்பிக்கைகளும் வீண் போகவில்லை. யெகோவா தேவன் சுகமாக்கி மறுபடியும் கட்டுகிறார். மன்னிப்பு அளிக்கிறார். அதுதான் கிருபை. இதுதான் மல்கியாவின் போதனை. இப்போதனை தூதர்களை நினைவுப்படுத்தியது. தூதர்கள் கடவுளால் தெரிந்து கொள்ளப்பட்ட ஜனங்கள். தூதர்களுடைய மனப்பூர்வமான கீழ்ப்படியாமை, அவர்களின் ஆசாரியர்களிடம் (1.1-2:9) தொடங்கி மற்ற மற்ற யூதர்களிடம் பரவிற்று (2:10-3:15). அவர்கள் கடவுளின் நாமத்தை அவமதித்தார்கள் (1:6)அவர்கள் போலியான ஆராதனைகளை மேற்கொண்டனர் (1:7-14). கடவுளின் காணிக்கைகளைத் தங்களுக்கு என்று வைத்துக் கொண்டனர் (3:8-12). அவர்கள் அகங்காரங்கமாய் நடந்து கொண்டார்கள் (3:13-15). யெகோவா தேவனுக்கும் அவர்களுக்கும் இடையே உள்ள உறவு முறிந்து தண்டிக்கப்படத் தக்கவர்கள் ஆனார்கள். இருப்பினும் துன்மார்கர் மத்தியில் ஒரு சிலர் நேர்மையாகவும் உண்மையாகவும் யெகோவா தேவனை நேசித்து கனம் படுத்தி வாழ்ந்து வந்தனர். இப்படிப்பட்டவர் மேல் யெகோவா தேவன் ஆசீர்வாத்த்தை ஆண்கள் மீதும் பெண்கள் மீதும் பொலிந்தருளினார் (3:16-18).

மல்கியா, இஸ்ரவேலர்களின் பின்வாங்கிப் போகும் தன்மையை அழகாக சித்தரித்திருக்கிறார். இஸ்ரவேலர்கள் தங்களின் பாவத்தின் நிமித்தம் தண்டிக்கப்படத் தக்கவர்கள். இருப்பினும் மல்கியாவின் போதனை நம்பிக்கையை ஊட்டுகிறது. எல்லோருக்கும் மன்னிப்பு உண்டு. மல்கியா 4:2ல், ‘ஆனாலும் என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள்மேல் நீதியின் சூரியன் உதிக்கும். அதின் செட்டைகளின் கீழ் ஆரோக்கியம் இருக்கும், நீங்கள் வெளியே புறப்பட்டுப்போய், கொழுத்த கன்றுகளைப்போல வளருவீர்கள்‘.

மல்கியா தன்னுடைய புஸ்தகத்தை இவ்வாறு முடிக்கிறான். எலிசா தீர்க்கதரிசி வருகிறான் என்று முடிக்கிறான். அவர் வந்து யெகோவா விசுவாசிக்கிற எல்லா ஜனங்களுக்கும் அளிக்கிறார் (4:5-6)

மல்கியா தீர்க்கதரிசி புஸ்தகம் பழைய ஏற்பாட்டிற்கும் புதிய ஏற்பாட்டிற்கம் ஒரு பாலமாக அமைகிறது.


2. மல்கியாவின் முக்கியக் குறிப்புகள்
மல்கியா, கிமு.450ல் ஜீடாவில் துர்க்கதரிசியாக இருந்தான். அவன் ஒரு கடைசி பழைய ஏற்பாட்டிற்கான..

அ) காலக்கட்த்தின் சூழ்நிலை: எருசலேம் நகரம் எழுப்பியும் மற்றும் புதிய ஆலயம் எழுப்பியும் 100 ஆண்டுகள் ஆனது. ஆனால் மக்கள் கடவுளின் மீது நிர்பிசாரம் கொண்டுள்ளனர்.

ஆ) தலைமை கருத்து
ஜனங்கள் செய்த பாவங்களினால் அவர்களுக்கும் கடவுளுக்கும் இடையே உள்ள தொடர்பு முறிவுபட்டது. மற்றும் அவர்கள் விரைவில் தண்டிக்கப்படுவார்கள். ஆனால், யாரொருவர் மனம் திருந்தினால் அவர்கள் கடவுளின் ஆசீர்வாத்த்தைப் பெறுவர். அவர் வாக்குத்தத்தத்தில் மேசியாவை அனுப்புவதாக ஆணித்தரமாக கூறியுள்ளார்.

இ) கதையின் முக்கியத்துவம்
மாயஜாலம், கடவுள் மேல் அக்கரையின்மை மற்றும் ஏனோதானோ என்று வாழும் வாழ்க்கை மிக பயங்கரமான பின் விழைவை விளைவிக்கும். கடவுளை சேவிப்பது தொழுது கொள்வதும் அன்றி வேறொன்றும் இன்மையிலும் மறுமையிலும் முக்கிய குறிக்கோளாக இருக்க்க் கூடாது.

சமகால தீர்க்கதரிசிகள் – கிடையாது


3. பெரிய தலையங்கம்
தலையங்கம் விளக்கம் / முக்கியத்துவம்

அ) கடவுளின் அன்பு
கடவுள் தன் ஜனங்களை நேசிக்கிறார் – யெகோவா தேவனைக் கண்டு கொள்ளவில்லை என்றாலோ, கீழ்ப்படியவில்லை என்றாலும் நிச்சயம் யெகோவா தேவன் அவர்களை நேசிப்பார். யெகோவ தேவனக்கு உத்தம்மான உண்மையாய் இருப்பவர்களுக்கு அளவில்லாத ஆசீர்வாதங்களை அளிக்க்க் காத்துக கொண்டிருக்கிறார். யெகோவா தேவனின் அன்புக்கு எல்லை கிடையாது.

ஆ) கடவுள் அளவற்ற பிரியம் வைத்திருப்பது நிமித்தம் போலி வாழ்க்கையும், அக்கறையில்லாத வாழ்க்கையும் வெறுக்கிறார். இப்படிப்பட்ட வாழ்க்கை அவரோடு உறவாடுவதைத் தடை செய்கிறது. நாம் எதைக் கடவுளுக்கு எவ்வாறு கொடுக்கிறோமோ அது நம்முடைய மெய்யான அன்பின் அளவைக் குறிக்கிறதாய் இருக்கிறது.

இ) ஆசாரியர்களின் பாவங்கள்
மல்கியா ஆசாரியர்களைக் குற்றம் சாட்டுகிறான். யெகோவா தேவனின் தேவைகளை அவர்கள் அறிவர். அவர்களின் தியாகங்கள் பலியானது மற்றும் நேர்மையற்றது. யெகோவா தேவனை ஆராதிக்கும் போது ஒரு சிந்தை இல்லாமல் ஆராதித்தல்.
யெகோவா தேவன் நம்முடைய மதிப்பிற்கம் மரியாதைக்கும் உரிய தேவனாக இருக்கிறார். பெருமை நிமித்தம் கடவுளிடம் கொடுக்க வேண்டிய ஆராதனை, கல்யான வைபவங்கள், பணம், குடும்பம் ஆகியவை கொடுக்காமல் இருக்க்க் கூடாது.

இ) கடவுளின் வருகை
விசுவாசமுள்ள மக்களைக் கடவுள் நேசித்து, அந்நேசத்தின் நிமித்தம் மேசியாவாக இப்பூலோகத்திற்கு வருகிறார். அம்மேசியா ஜனங்களை வழி நடத்தி நம்பிக்கையூட்டுகின்றன. அந்த நாள் ஜனங்களுக்குச் சுகத்தையும் சௌபாக்கியத்தையும் கொடுக்கின்றன. நாளாக இருக்கும். ஆனால் அவரைத் தள்ளிவிடும் ஜனங்களுக்கு நியாயத்தீர்ப்பு நாளாக விளங்கும்.

கிறிஸிதுவின் முதல் வருகை அவரை விசுவாசிக்கிற யாவரையும் பரிசுத்தப்படுத்தும் பக்குப்படுத்தும்.


4. வேதாகமக் குறிப்பு:


5. கலந்துரையாடுவதற்காக்க் கேள்விகள்
1. மல்கியாவின் பொருள் என்ன?
2. எப்பொழுது பரிமாரினார்?
3. கடவுளின் அன்பைப் பற்றி என்ன கூறினான்?
4. என்ன பாவங்கள் ஆசாரியர்கள் செய்தனர்?
5. மேசியாவின் பாத்திரம் என்ன?

ஆக்கில்லா, பிரிஸ்கில்லா தம்பதியினர்

ஆக்கில்லா, பிரிஸ்கில்லா கணவன் மனைவி
பவுலின் மிஷனரி ஊழியத்தில் பங்காளர்கள்.

கரு வசனம்
3. கிறிஸ்து இயேசுவுக்குள் என் உடன் வேலையாட்களாகிய பிரிஸ்கில்லாளையும் ஆக்கில்லாவையும் வாழ்த்துங்கள்.
4. அவர்கள் என் பிராணனுக்காகத் தங்கள் கழுத்தைக் கொடுத்தவர்கள்;: அவர்களைப்பற்றி நான் மாத்திரமல்ல, புறஜாதியாரில் உண்டான சபையாரெல்லாரும் நன்றியறிதலுள்ளவர்களா யிருக்கிறார்கள். ரோமர் 16:3-4

சுருக்கத்திரட்டு
• ஆக்கில்லா, பிரிஸ்கில்லா ஆகிய இருவரும் பவுலின் மிஷனரி ஊழியத்தில் பங்காளர்கள்.
• இவர்கள் மற்றவர்களுக்கு பாரமாய் இராதபடிக்கு கூடாரம் பண்ணுகிற தெரிழில் செய்து அவர்களது பணத் தேவைகளைச் சந்தித்துக் கொண்டனர்.
• இவர்கள் தங்கள் உயிரையும் பணயம் வைத்தனர் என பவுல் கூறுகிறார்.

1. அறிமுக உரை - அவர்களது கதை
சில தம்பதியினர்களுக்கு வாழ்க்கையை எப்படி வாழ்வது என்று தெரியும். அவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து, விட்டுக்கொடுக்காது, ஒருவரின் பெலத்தை மற்றவர் மூலதனமாய் வைத்து ஒரு திறமையான அணியை வடிவமைத்துக் கொள்கின்றனர். இப்படிப்பட்ட இருவரின் இணைப்பு சுற்றி இருந்தவர்களைப் பிரம்மிக்கச் செய்யும். ஆக்கில்லா மற்றும் பிரிஸ்கில்லா ஆகிய இவர்களும் இப்படிப்பட்ட ஒரு தம்பதியினராக காணப்பட்டனர். இவர்களை வேதம் ஒருபோதும் தனித்தனியாக பிரித்து கூறவே இல்லை. இவர்கள் குடும்ப வாழ்விலும் சரி ஊழியத்திலும் சரி இணைந்தே செயல்பட்டனர்.


பவுல் கொரிந்துவிற்கு மேற்கொண்ட இரண்டாவது மிஷனரி பயணத்தின்போது ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் அவரை அங்கே சந்தித்தனர். யூதருக்கு எதிராக கிளாடியஸ் என்ற மன்னனின் தீர்ப்பின்படி இவர்கள் ரோமாபுரியை விட்டு வெளியேற்றப்பட்டனர். இவர்களது வீடானது கூடாரத்தைப்போல அவர்களாலேயே அவ்வப்போது இடமாற்றக்கூடிய விதத்தில் அமைக்கப்பட்டு இருந்தது. இவர்கள் தங்களது இல்லத்தைப் பவுலுக்குத் திறந்து கொடுத்தனர். பவுலும் இவர்களோடு கூடாரம் செய்யும் தெரிழிலில் இணைந்து கொண்டார். பவுல் ஆக்கில்லா, பிரிஸ்கில்லா ஆகிய இவர்களோடு அவருக்கிருந்த ஆவிக்குரிய ஞானத்தின் ஐஸ்வர்யத்தை பகிர்ந்து கொண்டார்.

ஆக்கில்லா, பிரிஸ்கில்லா ஆகிய இருவரும் இந்த சந்தர்பத்தை நன்கு பயன்படுத்தி தங்களது ஆன்மீக கல்வியில் கவனம் செலுத்தினர். இவர்கள் பவுலது போதனைகளைக் கவனமாக கேட்டு, தாங்கள் கேட்டவற்றைத் தியானித்தனர். இவர்கள் அப்பொல்லோவினுடைய பேச்சினை கேட்டபோது அவனுடைய திறமைகளால்; ஈர்க்கப்பட்டனர். ஆனால் இவனது தகவல்கள் முழுமை பெறவில்லை என்று இவர்கள் புரிந்து கொண்டனர். இவர்கள் இவனிடத்தில் அங்கேயே நேருக்கு நேர் எதிர்த்து நிற்காமல் அமைதியாக அவனைத் தங்களது இல்லத்திற்கு அழைத்துச் சென்று அவன் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களை அவனுடன் பகிர்ந்து கொண்டனர். அதுவரை கிறிஸ்துவைப் பற்றின செய்தியை அப்பொல்லோ யோவான்ஸ் நானகனின் மூலமே கேட்டிருந்தான். ஆக்கில்லா, பிரிஸ்கில்லா ஆகிய இருவரும் இயேசுவினுடைய வாழ்க்கை, அவரது மரணம், அவரது உயிர்தெழுதல் மற்றும் தேவன் பரிசுத்த ஆவியாக நம்மோடு உண்மையாக ஜீவிக்கிறார் என்பதையும் இவனுக்கு தெரிவித்தனர். இப்பொழுதோ முழு விவரமும் தெரிந்தவனாக இவன் மிகுந்த சக்தியோடு தெரிடர்ந்து பிரசங்கித்தான்.

ஆக்கில்லா, பிரிஸ்கில்லா ஆகிய இருவரும் தங்களது இல்லத்தை ஓர் அன்புள்ள பயிற்சி மையமாகவும், ஆராதனை ஸ்தலமாகவும் பயன்படுத்தி வந்தனர். பல வருடங்களுக்குப் பின் ரோமாபுரிக்குத் திரும்பி அவர்களால் முன்னேற்ற மடைந்த ஓர் ஆலயமாக்கப்பட்ட வீட்டில் தங்கியிருந்தனர். அப்பொல்லோவைப் போல, இந்த பிரிஸ்கில்லாளும் எபிரேயர் நிருபத்தை எழுதியிருக்க வாய்ப்புள்ளது.

ஒரு காலக் கட்டத்தில் அநேகரது கவனம் கணவன் மனைவி ஆகிய இவர்கள் இருவருக்கிடையே என்ன நடக்கிறது என்பதில் தான் இருந்தது. ஆனால் இந்த ஆக்கில்லா, பிரிஸ்கில்லா ஆகிய இவர்கள், கணவன் மனைவி ஆகியவர்கள் மூலமாக என்ன நடக்க முடியும் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டாக திகழ்ந்தனர். இவர்களது திறமையானது இவர்கள் இருவருக்கும் இடையே இருந்த உறவின் நெருக்கத்தையும் காண்பிக்கிறது. அவர்களின் விருந்தோம்பல் பண்பானது அநேகரை இரட்சிப்புக்குள்ளாக வழி நடத்த ஒரு பெரிய வழி வாசலைத் திறந்தது. கிறிஸ்தவர்களது இல்லமானது சுவிசேஷத்தைப் பரப்பும் ஒரு சிறந்த கருவியாக இன்றும் காணப்படுகிறது. நமது கேள்வி என்னவென்றால் நமது இல்லமானது நம் வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு கிறிஸ்துவைக் கண்டுகொள்ளக் கூடிய இடமாக அமைந்துள்ளதா என்பதுதான்?

2. வல்லமையும் சாதனையும்
2:1 தலைசிறந்த தம்பதியினராக ஆரம்ப கால சபைகளில் தேவனுக்கு ஊழியம் செய்தனர்.
2:2 கூடாரம் செய்து அவர்களது அன்றாட தேவைகளை அவர்களாகவே சந்தித்துக் கொண்டனர்.
2:3 இவர்கள் பவுலின் நெருங்கிய நண்பர்களாக காணப்பட்டனர்.
2:4 கிறிஸ்துவின் முழு செய்தியையும் அப்பொல்லோவிற்கு விவரமாக தெரிpவித்தனர்.

3. அவர்களது வாழ்க்கையிலிருந்து பாடங்கள்
3:1 தம்பதியினர் இணைந்து ஒரு பயனுள்ள ஊழியத்தைச் செய்ய முடியும்.
3:2 நமது இல்லமானது சுவிசேஷத்திற்கு விலையுயர்ந்த கருவியாகும்.
3:3 தேவ சபையில் என்ன பொறுப்பு வகித்தாலும் சரி, ஒவ்வொரு விசுவாசியும் கடவுளைப் பற்றின நம்பிக்கையில் நன்கு கற்பிக்கப்படவேண்டும்.

4. வேதாகமக் குறிப்புகள்
அவர்களது கதையானது அப்போஸ்தலா; 18லும், ரோமர் 16:3-5, 1 கொரிந்தியர் 16:19, 2 தீமோத்தேயு 4:19 ஆகிய பகுதிகளிலும் குறிப்பிடப் பட்டுள்ளது.

5. கலந்தாலோசனைக்கான கேள்விகள்
5:1 ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாவும் தங்களது பணத்தேவைகளை எப்படி சந்தித்துக் கொண்டனர்?
5:2 அவர்களது இல்லத்தை தேவனுடைய ஊழிய வேலைகளுக்கு எப்படி பயன்படுத்தினார்கள்?
5:3 அப்பொல்லோ மேலும் கிறிஸ்தவனாக வளருவதற்கு இவர்களிருவரும் எப்படி உதவினார்கள்?

காய்பா..

பிரதான ஆசாரியன் - இயேசுவின் மரணத்திற்கு பொறுப்பானவன்

கரு வசனம்
49. அப்பொழுது அவர்களில் ஒருவனும் அந்த வருஷத்துப் பிரதான ஆசாரியனுமாகிய காய்பா என்பவன் அவர்களை நோக்கி: உங்களுக்கு ஒன்றுந் தெரியாது:
50. ஜனங்களெல்லாரும் கெட்டுப்போகாதபடிக்கு ஒரே மனுஷன் ஜனங்களுக்காக மரிப்பது நமக்கு நலமாயிருக்குமென்று நீங்கள் சிந்தியாமலிருக்கிறீர்கள் என்றான். யோவான் 11:49-50

கதைச் சுருக்கம்
• இயேசுவின் ஊழிய நாட்களில் இருந்த பிரதான ஆசாரியன்.
• யூத அரசின் அதிகார தலைவனாகவும், சங்கத் தலைவனாகவும் காணப்பட்டான்.
• ரோம ஆளுநருக்குப் பின் யூதேயாவில் சக்திவாய்ந்த நபராக காணப்பட்டான்.
• இவன் இயேசுவின் மரணம், அதனால் உண்டாகும் பரிகாரம் குறித்து தன்னையும் அறியாமல் தீர்க்கதரிசனமாக கூறினான்.
• இவன் வழக்கத்திற்கு மாறாக நீண்ட காலம் பணியிலிருந்தான். ஒரு குறிப்பிடத்தக்க அரசியல் திறனும் கொண்டிருந்தான்.

அறிமுகம் - அவனது கதை
காய்பாவினுடைய சேவை காலமானது கி.பி 18-36 என ஜோசப் கூறுகிறார். இவன் விட்டாலியஸ் என்ற சீரியா ஆளுநரால் பதவி இறக்கப்பட்டவன்.
இந்த காய்பா என்பவன் சாதுசிஸ் (Sadducees) என்ற ஒரு மதம் சார்ந்த குழுவிற்கு தலைவனாகவும் நன்கு கற்றவனாயும், செல்வம் நிறைந்தவனாயும் காணப்பட்டான். அரசியல் செல்வாக்கு மிகுந்தவனாயும் தேசத்தில் காணப்பட்டான். இந்த சிறந்த குழுவானது ரோமபுரியினரோடு ஒரு நல்ல உறவு கொண்டிருந்தது. இவர்களது வாழ்வு முறைக்கு ஆபத்து வந்துவிடுமென எண்ணி இவர்கள் இயேசுவை வெறுத்தனர். இயேசு கூறின செய்தியினை அவர்களால் ஏற்க முடியவில்லை. இராஜ்யத்திலே இருக்கின்ற தலைவர்கள் எந்த முறையீடுமின்றி காணப்பட்டனர்.

காய்பாவின் வழக்கமான கொள்கை என்னவென்றால் தன்னுடைய பதவிக்கோ அல்லது அந்தஸ்துக்கோ இடையூறு வருமென்றால் அதை எப்படியாயினும் நீக்கிவிடுபவனாக காணப்பட்டான். இயேசு மரிக்க வேண்டும் என்பது அவனது கேள்வி அல்ல, அவருடைய மரணம் எந்த நேரத்தில் நடக்க வேண்டும் என்பது தான். இயேசுவானவர் பிடிக்கப்பட்டு நீண்ட அனுபவத்திற்குள்ளாவது மட்டுமல்லாது இந்த யூத மன்றமானது ஒருவருக்கு மரண தண்டனை வழங்க வேண்டுமானால் ரோமர்களின் அனுமதியை பெற வேண்டியதாயிருந்தது. காய்பாவின் திட்டத்திற்கு எதிர்பாராத விதமாக யூதாஸ் கிறிஸ்துவைக் காட்டிக் கொடுத்து இவனுக்கு உதவினான். காய்பாவினுடைய எண்ணம் எல்லாம் தேவனின் அற்புதமான திட்டங்களின் நிறைவேறுதல் என்று காய்பாவால் அறிந்து கொள்ள முடியவில்லை. இவனுடைய சொந்த பாதுகாப்பிற்காக வேறு ஒருவரின் வாழ்க்கையைத் தியாகம் செய்ய வைக்கிறான். இதிலிருந்து இவனது சுய நலம் தெளிவாகத் தெரிகிறது. இதற்கு மாறாக இயேசு தமாக முன் வந்து தனது வாழ்க்கையை நமக்காக ஜீவ பலியாக ஒப்புக் கொடுத்தார் என்பது தேவன் நம்மேல் வைத்த அன்பிற்கு அடையாளமாகும். இயேசுவை சிலுவையில் தொங்கவைத்து மரிக்கச் செய்ததனால் தான் ஜெயித்து விட்டதாக காய்பா எண்ணினான். ஆனால் இயேசுவின் உயிர்த்தெழுதலையோ அவன் எண்ணவில்லை.

காய்பாவினுடைய மனதின் எண்ணங்கள் முற்றிலுமாக அடைக்கப் பட்டிருந்தது. அநேக சாட்சிகள் இருந்தபோதிலும் இவனால் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை ஏற்க முடியவில்லை. எவர்களுடைய வாழ்க்கை முற்றிலுமாய் உயிர்த்தெழுந்த கிறிஸ்துவினால் மாற்றப்பட்டிருந்ததோ அவர்கள் எல்லோரையும் அமைதி படுத்த முயற்சித்தான் (மத்தேயு 28:12-13). கிறிஸ்துவை விசுவாசியாதவர்களைப் பிரதிநிதித்தான் காய்பா. காரணம், இயேசுவை தேவன் என ஏற்றுக்கொண்டால் அது அவர்களை அதிகமாக பாதிக்கும் என்று எண்ணினான். தேவனுடைய குமாரனை ஏற்றுக்கொள்ளுகிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு என்கின்ற கடவுளுடைய வார்த்தையை விட இவர்கள் தங்களுடைய அதிகாரம் செல்வாக்கு மற்றும் இன்பம் நிறைந்த இந்த உலக வாழ்க்கையைத் தெரிந்து கொண்டனர். உங்களுடைய தேர்வு என்ன?

2. வல்லமையும் சாதனைகளும்
18 ஆண்டுகள் பிரதான ஆசாரியனாக பணியாற்றினவன். தனக்கே தெரியாமல் தீர்க்கதரிசியாக காணப்பட்டான்.

3. பெலவீனமும் குறைவுகளும்
3.1 இயேசுவின் மரணத்தில் நேரடியாக சம்பந்தப்பட்டவன்.
3.2 அவனது அதிகாரம் மற்றும் தனிப்பட்ட பாதுகாப்புக்கு அவனது அலுவலகத்தை வழியாக
பயன்படுத்திக்கொண்டான்.
3.3 இயேசுவை பிடிக்க வகைதேடினவனும், சட்ட விரோத சோதனை மேற்கொண்டவனும், இயேசுவை சிலுவையில் அறையும்படி அங்கீகரிக்க பிலாத்துவை நிர்பந்தித்தவனும், இயேசுவின் உயர்த்தெழுதலை தடுக்க முயற்சித்தவனும், பின்னர் இயேசு உயிர்த்தெழுந்தார் என்ற உண்மையை மறைக்க முயற்சி செய்தவனுமாக காணப்பட்டான்.
3.4 மத தோற்றப் பொலிவை வைத்து ரோமரோடு சமரசம் செய்தவன்.
3.5 கிறிஸ்தவர்களைக் கொடுமை படுத்துவதில் பிற்காலங்களில் சம்பந்தப்பட்டவன்.


4. இவனது வாழ்க்கையிலிருந்து பாடங்கள்
4.1 தேவன் எதிரிகளின் மாறுபாடான நோக்கங்கள் மற்றும் செயல்களைக் கொண்டும் தமது சித்தத்தை நிறைவேற்றுவார்.
4.2 சுயநல நோக்கங்களை நாம் ஆவிக்குரிய கருத்தோடும் தேவ வார்த்தைகளாலும் மூட முயற்சிப்போமானாலும், தேவன் நமது உள்ளத்தின் எண்ணத்தை அறிந்தே இருக்கிறார்.

5. வேதாகமக் குறிப்புக்கள்
மத்தேயு 28:12-13; யோவான் 11:49-50 மற்றும் அப்போஸ்தலர் நடபடிகள் 4:6லும் இவனை குறித்து வாசிக்கலாம்.

6. கலந்தாலோசனைக்கான கேள்விகள்
6.1 இவன் எத்தனை ஆண்டுகள் பிரதான ஆசாரியனாக பணியாற்றினான்?
6.2 இவனை பதவி இறக்கியவன் யார்?
6.3 இயேசுவை சிலுவையில் அறைய யூதாஸ் எங்ஙனம் உதவினான்?
6.4 இயேசுவின் இறப்பு ஒரு பாக்கியம் என இவன் கருதினது ஏன்?
6.5 ஏன் இவனும் இவனைச் சார்ந்த மற்றவர்களும் இயேசுவை ஏற்றுக்கொள்ளவில்லை?

லாபான்

பெத்துவேலின் குமாரன், ரெபெக்காளின் சகோதரன்.


முக்கிய வசனம்:
"என் பிதாவின் தேவனாகிய ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் பயபக்திக்குரியவரும் என்னோடிராமற்போனால, நீர் இப்பொழுது என்னை வெறுமையாய் அனுப்பிவிட்டிருப்பீர்; தேவன் என் சிறுமையையும் என் கைப்பிரயாசத்தையும் பார்த்து, நேற்று ராத்திரி உம்மைக் கடிந்து கொண்டார் என்று சொன்னான்." (ஆதியாகமம் 31:42)


சுருக்கமான கதை:
• லாபான் பெத்துவேலின் குமாரன், யாக்கோபுக்கும் ஈசாவுக்கும் மாமன். (ஆதியாகமம் 24:29)
• ரெபெக்காளும் ஈசாக்கும் திருமணம் புரிய லாபான் அனுமதி அளித்தான்.
• யாக்கோபுக்கு ராகேலின்மேல் இருந்த மிகுந்த ஆசையைப் பயன்படுத்தி, அவன் தனக்கு 14 வருடங்கள் ஊழியம் செய்ய லாபான் சூழ்ச்சி செய்தான்.
• லாபான் தன் ஏமாற்றப்பட்டதை அறிந்தான். (ஆதியாகமம் 26)
• அவன் யாக்கோபுடன் ஓர் உடன்படிக்கை செய்ய வேண்டியதின் அவசியத்தை அறிந்தான்.( ஆதியாகமம் 31)
• யாக்கோபு வெற்றி பெற்றது தன்னுடைய தந்திரத்தால் அல்ல, ஆண்டவருடைய உடன்படிக்கையின் கிருபையால்.


1. முன்னுரை– லபானுடைய கதை:
எபிரேய மொழியில் லாபான் என்ற பெயருக்கு "வெண்மை" என்று பொருள். நாம் எல்லோரும் சில நேரங்களில் சுய நலவாதிகள்தான். ஆனால் சிலர் இந்த பலவீனத்துக்கு அடிமைகள். லாபானின் வாழ்நாள் முழுவதும் சுய நலத்தால் முத்திரை குத்தப்பட்டது. அவனது முதன்மையான நோக்கமே தன்னைத்தான் கவனித்துக்கொள்ளுவதுதான். அவன் மற்றவர்களை எவ்வாறு நடத்தினான் என்பது இந்த நோக்கத்தால்தான் கட்டுப்படுத்தப்பட்டது. தன் சகோதரி ரெபெக்காளுக்கும் ஈசாக்குக்கும் நடந்த திருமணத்தின் மூலம் தனக்கு லாபகரமான ஏற்பாடுகளைச் செய்து கொண்டான்; தன் குமாரத்திகளின் வாழ்க்கையை பேரம் பேசும் சில்லுகளாக பயன்படுத்தினான். இறுதியில் யாக்கோபு லாபானைத் தோற்கடித்தான். ஆனால், வயதில் பெரியவனான லாபான் இந்தத் தோல்வியை ஒப்புக்கொள்ள விரும்பவில்லை. யாக்கோபின் மேல் அவனுக்கு இருந்த பிடி உடைந்து போனாலும், அந்த இடத்தைவிட்டு நிரந்தரமாகப் போய்விடுகிறேன் என்று யாக்கோபை உறுதிமொழி செய்யச் சொன்னதன் மூலம், லாபான் யாக்கோபை ஓரளவாவது கட்டுப்பாடு செய்ய முயன்றான். யாக்கோபையும், யாக்கோபின் ஆண்டவரையும் தன்னால் சமாளிக்க முடியாது என்பதை உணர்ந்தான்.

மேலோட்டமாகப் பார்க்கும்போது நாம் லாபானுடன் அடையாளப் படுத்திக்கொள்வது கடினமான போதிலும், அவனுடைய சுயனலம்தான் நமக்கும் அவனுக்கும் இருக்கும் ஒரு பொதுவான காரியம். அவனைப் போலவே, மற்றவர்களையும், நிகழ்வுகளையும் நம்முடைய சுய லாபத்துக்காகக் கட்டுப்படுத்தும் மனப்போக்கு பல நேரங்களில் நமக்கும் இருக்கும். மற்றவர்களை நடத்தும் விதத்துக்கு நாம் சொல்லும் "நல்ல" காரணங்கள், நம்முடைய சுயனலமான நோக்கத்தை மறைக்க நாம் போடும் மிக மெல்லிய போர்வையாகும். நம்முடைய சுயனலத்தை நம்மாலேயே கண்டுபிடிக்க முடியாது. அதைக் கண்டு பிடிக்க ஒரு வழி, நம்முடைய தவறை ஒப்புக்கொள்ள நாம் தயாராக இருக்கிறோமா என்று ஆராய்வதுதான். லாபானால் இதைச் செய்ய முடியவில்லை. நீங்கள் சொல்லியதைக் குறித்து நீங்களே ஆச்சரியப்பட்டு, உங்களுடைய தவறான நடவடிக்கையை ஒப்புக்கொள்ளத் தவறும்போது, உங்களுடைய சுய நலத்தின் காட்சியைக் காணலாம். சுயனலத்தை அடையாளம் கண்டு கொள்ளுவது ஒரு வேதனை தரும் காரியம், ஆனால் அதுதான் ஆண்டவரை நோக்கி நாம் செல்லும் பாதையில் நம்முடைய முதல் அடியாகும்.


2. லாபானுடைய பலமும், சாதனைகளும்:
அ) ஆபிரகாமின் குடும்பத்தில் இரண்டு சந்ததியாரின் திருமணங்களைக் கட்டுப்படுத்தினான். ( ரெபெக்காள், ராகேல் மற்றும் லேயாள்).
ஆ) மிகவும் கூர்மையான அறிவுடையவன்.


3. பலவீனங்களூம் தவறுகளும்:
அ) தன்னுடைய சுய லாபத்துக்காக மற்றவர்களை கட்டுப்படுத்தினான்.
ஆ) தன் தவறுகளை ஒப்புக்கொள்ள மனதில்லாதிருந்தான்.
இ) யாக்கோபை உபயோகப்படுத்தி உலகத்துக்குரிய பணத்தில் பயனடைந்தான் ஆனால் யாக்கோபின் தேவனை அறிந்து வழிபட்டதன் மூலம் ஆவிக்குரிய வாழ்க்கையில் பயன் அடையவில்லை.


4. அவனுடைய வாழ்க்கையிலிருந்து பாடங்கள்:
அ) மற்றவர்களை உபயோகப்படுத்துபவர்கள் கடைசியில் தாங்களே மற்றவர்களால் உபயோகப்படுத்தப்படுவதைக் காண்பார்கள்.
ஆ) ஆண்டவருடைய திட்டத்தை யாராலும் தடுக்க முடியாது.


5. வேத ஆதாரங்கள்:
லாபானுடைய கதை ஆதியாகமம் 24:1–31:55 வசனங்களில் கூறப்பட்டுள்ளது.


6. விவாதத்துக்குரிய கேள்விகள்:
6.1. லாபானுக்கும் ஆபிரகாமுக்கும் இருந்த உறவு என்ன?
6.2. யாக்கோபு தன்னுடைய சகோதரனையே ஏமாற்றினான். அவனை லாபான் எவ்வாறு ஏமாற்றினான்?
6.3. லாபானுடைய பிடியிலிருந்து யாக்கோபு எப்படி தப்பினான்?
6.4. அவனுடைய பலவீனங்கள் என்ன?
6.5. அவனுடைய வாழ்க்கையிலிருந்து நாம் கற்கும் பாடங்கள் என்ன?


மொழி பெயர்ப்பு:
திருமதி. கிரேஸ் ஜட்சன்,
பரி. பவுல் ஆலயம், பெட்டாலிங் ஜெயா.

பாலியலின் வல்லமை

புது மாப்பிள்ளை சகோ.கோல்வின் பாலியல் குறித்து சரியாகப் புரிந்து கொள்ளவேண்டும் என்று தான் கற்றுக் கொண்டதை அனைவரும் அறிய இங்கு தந்திருக்கிறார். மிகவும் நடைமுறை மொழியில் எழுதப்பட்டிருக்கிறது.

பாலியல் உணர்வுகளை மேற்கொள்ள முடியாமல் பல கிறிஸ்தவர்களும் அதனுடன் போராடிக் கொண்டு இருக்கின்றனர். சிலர் பாவத்தில் விழுந்தும் விடுகின்றனர். பாலியல் உணர்வுகள் குறித்த என் கருத்துக்களையும் இங்கு பதிக்கிறேன்.

1.அனேகர் பாலியல் உணர்வுகள் எழும்புவதே பாவம் என்று நினைக்கின்றனர். இது தவறு. நமக்கு பசி உணர்வு இருப்பது போலவே, பாலியக் உணர்வும். நாம் பசிக்கிறது என்பதற்காக கண்டதையும் சாப்பிடுவதில்லை. அதே போலவே பாலியல் உணர்வையும் அணுகவேண்டும். (எபிரேயர் 13:4).

2. வேறு சிலர் பாலியல் உணர்வையும், பாலியல் இச்சையையும் போட்டுக் குழப்பிக் கொள்ளுகிறார்கள். இன்றைய காட்சி ஊடகங்களின் வலிமையான தாக்குதலினால் தவறான விதையே பெரும்பாலும் விதைக்கப்படுகிறது.

3. நாம் பலுகிப் பெருக வேண்டும் என்பதற்காகவும், கணவனும் மனைவியும் ஒரே சரீரம் என்பதை உணரவும் பாலியல் உணர்வு கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆதாமும் ஏவாளும் பாவம் செய்வதற்கு முன்பே தேவன் அவர்கள் பலுகிப் பெருகுங்கள் என்று கட்டளை கொடுத்திருந்தார்.

4. ஒரு பெண்ணை இச்சையோடே பார்ப்பதே (பாலியல்) பாவம் என்று இயேசு சொன்னார். ஆகவே பாலியல் இச்சையை மேற்கொள்ள ஒரே வழி- அதற்கு விலகி ஓடுவதே. இதுவே வேதம் தரும் சரியான ஆலோசனை. அனேகரின் வீழ்ச்சிக்கு ஒரு காரணம், அவர்கள் தங்கள் திறமை மற்றும் ஆவிக்குரிய அனுபவத்தின் மேல் நம்பிக்கைக் கொண்டு பாலியல் இச்சைக்கு விலகி ஓடாமல் போராடிக் கொண்டிருந்ததாலேயே. பெரும் மனிதர்களும் இதற்கு விதிவிலக்கல்ல.

5. பாலியல் குறித்து இன்றும் பொதுவில் வெளிப்படையாக நாம் விவாதிக்க முடியாத சூழல் காணப்படுகிறது. இதனாலேயே அனேகர் தவறானவைகளையே முதல் பாடமாகப் பெற்றுவிடுகின்றனர். ஆனால் பரிசுத்த வேதாகமத்தில் நம் எல்லாக் கேள்விகளுக்கும் விடை உண்டு.

வேதாகம அடிப்படையில் அனேக நல்ல புத்தகங்கள் எழுதப்பட்டதுண்டு. அதில் எனக்கு மிகவும் பிடித்தமான புத்தகங்களுள் ஒன்று லெஸ்டர் சம்ரால் என்ற தேவ மனிதரால் எழுதப்பட்ட 60 THINGS GOD said about SEX. மற்ற புத்தகங்களைக் காட்டிலும் இப்புத்தகம் முழுக்க முழுக்க வேதாகமத்தையே மேற்கோள் காட்டி எழுதப்பட்டிருந்தது. தமிழில் அப்புத்தகத்தை வெளியிட எண்ணி இருந்தேன். அவர்கள் ராயல்டி கேட்டதால் என்னால் வெளியிட முடியாமல் போயிற்று.

Tuesday, December 27, 2011

கணனியும் கிருஸ்தவமும் ஒரு ஒப்பீடு

தற்பொழுது கணனி இன்றியமையாத பொருள்
அதனுடன் கிருஸ்தவர் எப்படி பொருந்துகின்றனர்
உள்ளே.......


கணனியின் பாகங்கள்                       கிருஸ்தவம்

 

 
  1. பவர் சப்ளை (smps)                                பிதா
  2. பிராசசர்                                                  இயேசு
  3. மதர்போர்டு                                             பரிசுத்தாவி
  4. ராம்                                                       சபை                                     
  5. ஹார்டிஸ்க்                                             மனிதன்
  6. கீபோட்                                                   சுவிஷேசம்
  7. மவுஸ்                                                   வேதாகமம்
  8. சிடி பிளாபி டிரைவ்                                  சுவிஷேசம் இரட்சிப்பு ஆராதனை
  9. ஆப்பரேட்டிங் சிஸ்டம்                              ஆத்துமா
  10. சாப்டுவேர்                                               பிரசங்கங்கள்
  11. வைரஸ்                                                  சாத்தான்
  12. பிரின்டர்                                                 ஆவியின் கனிகள்
  13. ஸ்கேனர்                                                இயேசுவை பிரதிபளிப்பது
  14. மானிட்டர்                                               சமூகம்
  15. ஸ்பீக்கர்                                               ஊழியம்

    கணனி எப்படி இயங்குகின்றதோ அதேபோன்று தான் கிருஸ்தவமும் இயங்குகிறது
  1. கணனிக்கு மிகமிக அவசியமான ஒன்று(SMPS) பவர் சப்ளை இது இல்லாவிட்டால் கணனி இயங்கவே முடியாது அவ்வாறாக இருப்பவர் பிதா
  2. பிராசசர் இது கணனியின் அனைத்துபகுதியையும் கட்டுபடுத்தும் மிகவும் முக்கிய பகுதி, அனைத்தையும் இயக்குவது இதுதான் இப்படியாக இருப்பவர் இயேசு
  3. மதர்போர்டு அனைத்து செயல்பாடுகளும் இதன் மூலமாக தான் நடத்தப்படுகிறது அல்லது பரிமாற்றம் செய்யபப்படுகிறது  இதுவும் அவசியமான ஒன்று இப்படியாக செயல்படுபவர் பரிசுத்தாவி
  4. ராம் இது தேவைக்கு எற்ப  மாறி இருக்கும் 128, 512 தற்பெழுது இன்னும் அதிகமாக உள்ளது இது கணனியின் தற்காலிக நினைவகம் காபி பெஸ்ட் செய்யபடுவது இதன் மூலமாகதான் இப்படி இருப்பது சபைகள்
  5. கணனியில் மிகவும் முக்கிய பகுதி ஹார்டிஸ்க் இதில்தான் நாம் அனைவரும் தகவல்களை சேமித்து வைக்கிறோம் மனிதனும் அந்த நிலையில்தான் செயல்படுகிறான்
  6. கீபோர்ட் மூலமாக அனைத்து தகவலும் தட்டச்சு செய்யப்படுகிறது அது போன்று மனிதனுக்கு சுவிஷேசம்மூலம் இரட்சிப்பின் தகவல் உள்செல்கிறது
  7. மவுஸ் என்பது  கம்பியூட்டரில் சுட்டுவதற்காக பயன்படுத்தபடுகிறது அது போன்று மனிதனின் அவல நிலைகளை சுட்டிகாட்டுகிறது வேதாகமம்
  8. சிடி பிளாபி டிரைவ் இவை கம்பியூட்டரில் தகவல் பரிமாற்றம் செய்ய பயன்படுத்தபடுகிறது இது போன்று சுவிசேசம் இரட்சிப்பு ஆராதனை விசுவாசம்... இவை மனிதனுக்கு ஆத்தும வளர்ச்சிபரிமாற்றத்தை தருகிறது
  9. ஆப்பரேட்டிங் சிஸ்டம் வின்டோஸ் 3.1 தொடங்கி 95 98 ME 2000 XP தற்பொழுது வின்டோஸ் வெஸ்ரா வரை வந்துள்ளது இது தவிர லினக்ஸ் மாக்.. போன்றவைகளும் உள்ளது இதன் மூலமாக தான் கம்பியூட்டரை பயன்படுத்த முடியும் இது மனிதனின் ஆத்துமா மற்றும் ஆத்தும வளர்ச்சியை குறிக்கும்
  10. சாப்டுவேர் நம் தேவைக்கு ஏற்ப உபயோகபடுத்தபடும் மென்பெருட்கள் இவை நமது தகவல்களை மெருகூட்டகூடியது இவ்வாறு நம் ஆத்தும வளர்ச்சிக்கு தேவைக்கு ஏற்ப பிரசங்கங்கள் நமக்கு அளிக்கபடுகிறது
  11. வைரஸ் இது நமது கம்பியூட்டரில் உள்ள அனைத்து தகவலையும் அழிக்கும் சில வைரஸ் ஹார்டிஸ்கை தாக்கி முற்றிலும் தகவல் இல்லாதவாறு செய்து விடும் அதனால் ஆண்டிவைரஸ் பயன்படுத்த வேண்டும் அதுவும் அவ்வப்போது அப்டேட் செய்ய வேன்டும் இதே போன்று தான் சாத்தான் நம்மை முற்றிலும் அழித்துவிடா வன்னம் காக்க ஜெபம் என்னும் ஆன்டிவைரஸ்சை அப்டேட் செய்து கொண்டே இருக்க வேண்டும்
  12. பிரின்டர் நமது தகவல்களை அப்படியே வெளிபடுத்தி காட்டகூடியவை இதை போன்று நமது வாழ்வில் உள்ள ஆவியின் கனிகள் பிறருக்கு வெளிபடுத்தபடவேண்டும்
  13. ஸ்கேனர் நாம் கொடுக்கும் தகவல்களை அதாவது புகைபடம் அல்லது கடிதங்கள்  அப்படியே எடுத்து காட்டுவது அல்லது பிரதிபளிப்பது இவ்வாறு நாமும் இயேசுவின் அன்பை, குணங்களை பிரதிபளிக்கவேண்டும்
  14. மானிட்டர் (cpu)கம்பியூட்டரில் நடைபெறும் அனைத்தையும் நமது கண்களுக்கு பிரதிபளிக்க கூடியது இவ்வாறு நாம் கிருஸ்துவுடன் வாழும் வாழ்க்கையை சமூகத்தின் மூலம் பிரதிபளிக்கபடும்
  15. ஸ்பீக்கர் நாம் வைத்துள்ள (mp3 or more..)தகவல்களை ஒலியின் முலம் வெளிபடுத்தும் இவ்வாறு நாமும் நாம் பெற்ற இன்பம் இயேசுவை பெருக இவ்வையகம் என்று ஊழியம்செய்து வெளிபடுத்த வேன்டும்

ஈரானில் இஸ்லாமிய இமாம்


ஈரானில் இஸ்லாமிய இமாம் தொலைக்காட்சி மூலம் இயேசுவை ஏற்றுக்கொண்டதால் நாட்டை விட்டு வெளியேறவேண்டியதாயிற்று.
(இன்னும் நான்கு இமாம்கள் விசுவாசிகளாக உள்ளனர்)
(வார்த்தைக்கு வார்த்தை சரியான மொழிபெயர்ப்பு அல்ல,)
மார்க் எல்லீஸ்


துல்சா ஓக்லஹோமா
- இவர் ஈரானில் ஒரு உயர் மட்ட இஸ்லாமிய தலைவர் .இயேசுவை ஏற்றுகொண்ட பிறகு சிறைதண்டணையும்,கொலைமிரட்டள்களையும் சந்தித்தபின்ன்னர் நாட்டை விட்டு வெளியேறினார் .அமேரிக்காவில் வசித்து வரும் ஈரானிய போதகர் இத்தகவலை தெரிவிக்கிறார்.

TBN NAJAT TV

மூலம் ஒளிபரப்பபட்ட நிகழ்சிகளை இந்த இமாம் பார்த்தார் என்று HARWEST WORLD OUT REACH உடைய ஸ்தாபகரும்,தலவருமான REZA SAFA கூறுகிறார்.TBN NAJAT TV தான் பெர்சிய மொழியில் ஒளிபரப்பப்படும் முதல் கிறிஸ்தாவ சேனல் ஆகும்.ஈரான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் 24/7-ல் ஒளிபரப்பாகின்றது.
இமாம்

,பிப்ரவரி மாதத்தில் TBN NAJAT TV யின் தொலைபேசி ஆலோசகர்களை அழைத்து,தான் இயேசுவை ஏற்றுக்கொள்ளுவதற்காக ஜெபிக்கும் படி கேட்டுக்கொண்டார்.

REZA SAFA கூறியதாவது" இமாம் கடந்த இரண்டு வருடங்களாக நம்முடைய நிகழ்ச்சிகளை பார்த்து வருகிறார்"அவர் பார்க்க ஆரம்பித்த பொழுதே விசுவாசிக்க தொடங்கினார் ,ஆனால் அவருடைய அறிக்கை மூலமாக அவரது இரட்சிப்பு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
"

இந்த மனிதர் குரானின் ஒவ்வொரு வசனங்களையும் கற்றறிந்தவர்" நம்முடைய நிகழ்ச்சிகளை பார்க்க தொடங்கியதில் இருந்து அவருக்கு இஸ்லாமிய நம்பிக்கை குறித்து சந்தேகம் எழும்பியது.இஸ்லாமிய தீவிரவாதத்தை குறித்து கேள்வி எழுப்பியதன் நிமித்தம் இவர் 9 மாதங்கள் சிறை தண்டணை அனுபவித்தார்."சிறையில் இருந்து விடுதலையான பின்பு எண்ணற்ற கொலைமிரட்டல்களை சந்தித்ததினால் நாட்டை விட்டு வெளியேறினார் .
இன்னும் அநேக இமாம்கள் அவருடைய நிலைமையிலேயே உள்ளனர்

."நல்ல உயர்ந்த மதிப்பில் உள்ள நான்கு இமாம்கள் அவருக்கு தெரியும் . அவர்களும் அவருடைய நிலையில் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்"
"

இந்த இமாம் எல்லாவற்றையும் விட்டு விட்டு வெளியேறினார்." அவருடைய அமைப்பபில் அவருக்கு மாதம் 700000 சம்பளம் பெற்று வந்தார் .அவர் எல்லோராலும் கௌரவமாக மதிக்கப்பட்டுவந்தார்.ஆனால் சுவிஷேசம் அவருக்குள் வந்தவுடன் அவர் கிறிஸ்துவுக்காக எல்லாவற்றையும் இழந்தார் .இப்பொழுது அவர் வெளிநாட்டில் ஓர் ஏழை அகதியாக உள்ளார் ".
"

தேவன் ஈரானில் இஸ்லாமிய அஸ்திபாரங்களை அசைத்துவருகிறார், அநேக அரசு அதிகாரிகள் சந்திக்கப்படவேண்டும் என்று ஜெபித்து வருகிறோம்.தேவனும் பதில் கொடுத்து வருகிறார். இன்னுகதவுகளை திறக்கும்படி ஜெப்யுங்கள்"என்று REZA SAFA கூறுகிறார். [/quote]
http://www.spcm.org/Journal/spip.php?article7247

Friday, December 16, 2011

Useful Website in Tamil

கன்னிப் பிறப்பு கற்பனையா?

புதிய ஏற்பாட்டில் மத்தேயு 1:16-25 இலும் லூக்கா 1:26-38 இலும் இவ்வுபதேசம் நேரடியாக குறிப்பிடப்பட்டுள்ளது. “இயேசுகிறிஸ்து பிறக்கும்வரை, யோசேப்பு மரியாளை அறியாதிருந்தான்“ என கூறும் மத்தேயு (1:25) 'இருவரும் கூடிவரும் முன்பே மரியாள் பரிசுதத ஆவியினால் கர்ப்பவதியானாள்“ (1:18) என்று அறியத்தருகிறார். இச்சம்பவம் நடைபெற்றபோது மரியாள் கன்னிப் பெண்ணாகவே இருந்தாள் என்பதை லூக்காவும் உறுதிப்படுத்தியுள்ளார். (1:26-38) “பரிசுத்தஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் குழந்தை பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் எனப்படும் என கன்னிப் பெண்ணான மரியாளிடம் கூறிய தேவதூதன் (லூக். 1:35) தான் அறியாமலேயே அவள் கர்ப்பவதியாயிருப்பதனால் அவளைத் தள்ளிவிட யோசனையாயிருந்த யோசேப்பிடம் “அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது“ என அறிவித்தான் (மத். 1:20) 

இயேசுவின் கன்னிப் பிறப்பைப் பற்றி அதாவது, கன்னிப் பெண்ணான மரியாள் கருத்தரித்து இயேசுவெனும் தெய்வீகக் குழந்தையைப் பெற்றெடுத்ததைப் பற்றி மத்தேயுவும் லூககாவும் குறிப்பிட்டுள்ள விடயங்கள் நம்பகமானவை என்பதி்ல் எதுவித சந்தேகங்களுமில்லை. இவை சரி்த்திர பூர்வமான ஆதாரக் குறிப்புகளினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இச்சம்பவம் எரோது ராஜாவின் நாட்களில் நடைபெற்றதாக மத்தேயு அறியத்தருகிறார். (2:1) சீரிய நாட்டில் சிரேனியு என்பவன் தேசாதிபதியியாக இருந்த போது, முதலாம் குடிமதிப்பு எழுதப்பட்ட வேண்டுமென அகுஸ்துராயனால் கட்டளை பிறப்பிக்கப்பட்ட காலத்திலேயே இயேசு பிறந்தாரென லூக்கா மற்றுமொரு சரித்திர பூர்வமான ஆதாரத்தைத் தருகிறார். (2:1-6) சரித்திராசிரியராகவும், வைத்தியராகவும் இருந்த லூக்கா தான் முழுநிச்சியமாய் நம்புகின்ற சங்கதிகளை ஆரம்பமுதல் கண்ணாரக் கண்டு வசனத்தைப் போதித்தவர்கள் தங்களுக்கு ஒப்புவித்தபடியே அவைகளைக் குறி்த்து சரித்திரம் எழுத அநேகம் பேர் ஏவப்பட்டபடியினால் ஆதிமுதல் எல்லாவற்றையும் விசாரித்தறிந்து எழுதியுள்ளமை (1:1-4) அவருடைய நூல் நம்பகமான என்பதை உறுதிப்படுத்துகின்றது. 

மத்தேயுவும் லூக்காவும் கன்னிப்பிறப்பு உபதேசத்திற்கு போதுமான ஆதாரங்களை தந்தாலும் கூட, அவர்களுடைய குறிப்புகளில் ஒருசில் அம்சங்கள் சற்று தெளிவற்றது போல காணப்படுகின்றன என்பதை மறுப்பதற்கில்லை. எனினும் அவை எவ்வகையிலேனும் கன்னிப்பிறப்பு உபதேசத்தைப் பொய்யாக்கிவிடவில்லை. இவ்வுபதேசத்தை ஏற்றுக்கொள்ளாதவர்கள் மட்டுமே, .இதை காரணம் காட்டி கன்னிப்பிறப்பு நம்பக்கூடியதொன்றல்ல என வாதிடுகி்ன்றனர். எனவே தெளிவற்றதுபோல தென்படும் பகுதிகளை நாம் சரிவர விளங்கிக் கொள்ள வேண்டும். அப்போது மட்டுமே இவ்வுபதேசத்தை எதிர்ப்பவர்களுக்கு தகுந்த பதில்களைக் கொடுப்பது இலகுவானதாயிருக்கும்.

மரியாள் கன்னிப் பெண்ணாக இருக்கும்போதே பரிசுத்தவாயினால் கர்ப்பவதியானாள் (1:18-20) யோசேப்புடன் எவ்வித தாம்பத்திய உறவும் ஏற்படவில்லை (1:25) என நேரடியாக குறி்ப்பிட்டிருந்தபோதிலும் இருவருக்கும் இடையிலான உறவுமுறை முன்னுக்குப் பின் முரணான விதத்தில் குறிப்பிட்டுள்ளது போல் தென்படுகின்றது. 1:18 'யோசேப்பு மரியாளுக்குப் புருஷனாக நியமிக்கப்டப்டிருந்தவன்“ என அறியத் தருகையில், அடுத்தஅவனம் இதை மறுத்து, யோசேப்பு மரியாளின் புருஷன்“ (1:19) என கூறுவதோடு “மரியாள் யோசேப்பின் மனைவி“ என்றும் தெரிவி்ககின்றது. (1:20) மட்டுமல்ல. 1:19 இல் யேசேப்பு மரியாளை தள்ளிவிட (விவாகரத்து செய்ய) மனதாயிருந்தான் என்றும் காணக்கிறோம். மரியாள் கர்ப்பவதியாயிருக்கும்போது, அவளுக்கும் யோசேப்புக்கும் இடையிலிருந்த உறவுமுறை இரண்டுவிதமாக அதாவது, நிச்சயதார்த்தம் செய்து கொண்டவர்களாகவும், திருமணம் முடித்த கணவன்-மனைவியாகவும் குறிப்பிடப்பட்டுள்ளமை, மரியாள் உண்மையிலேயே கன்னிப் பெண்ணாகத் தான் இருந்தாளா இல்லையா என்பதை நிச்சயமாக அறிந்து கொள்ள முடியாதுள்ளது என வாதிடுவோரும் நம்மத்தியில் உள்ளனர். இயேசு யோசேப்புக்கு பிறந்த பிள்ளையாயிருக்கலாம் எனும் சந்தேகத்தை இது தோற்றுவிப்பதாக உள்ளது. என்று அவர்கள் கருதுகின்றனர்.

மரியாளுக்கும் யோசேப்புக்கும் இடையிலான உறவுமுறை இரண்டுவிதமாக மத்தேயுவினால் குறிப்பிடப்பட்டிருப்பது உண்மையேயானும் இதை வைத்துக் கொண்டு, இயேசு பிறக்கும்பரை மரியாள் கன்னிப் பெண்ணாயிருக்கவில்லை, இயேசு யோசேப்புக்குப் பிறந்த குமாரன் என வாதிட்டால், 18ம், 25ம் வசனங்களுக்கு எவ்விதான விளக்கங்களைக் கொடுக்க முடியும்? இவையிரண்டும் கனனிப்பிறப்பு உபதேசததை நேரடியாக போதிக்கின்றது. எனவே உறவுமுறை வித்தியாசமான முறைகளில் குறிப்பிடப்பட்டிருப்பதற்கு வேறு காரணங்கள் இருந்திருக்க வேண்டும். பாலஸ்தீன கலாச்சாரத்தில் அக்காலத்தில் நடைமுறையிலிருந்த திருமண வைபவ சடங்காச்சார முறைகளே இதற்கான காரணம் என மறைந்த வேத வியாக்கியானி வில்லியம் பாக்ளே அறியத்தருகிறார். “அவர்களது திருமண வைபவம் மூன்று படிமுறைகளைக் கொண்டிருந்தது. தம் பிள்ளைகள் சிறுவர் சிறுமியராயிருக்கும்பேது திருமணப் பொருத்தம் பார்த்து, இன்னார்க்கு இன்னார் என முடிவு செய்வது பெற்றோரின் வழக்கமாயிருந்தது, உரிய காலம்வரும்போது நிச்சயதார்த்தத்தின் மூலம் இது உறுதிப்படுத்தப்படும் இதன் பின் அவர்கள் கணவன் மனைவியாகவே கருதப்பட்டனர். கன்னிவிதவைகள் அக்காலத்தில் பலஸ்தீனாவில் இருக்க இதுவே காரணமாகும். நிச்சியதார்த்தமானது சட்டரீதியாக இருவரையும் இணைப்பதாயிருந்தமையினால், விவாகரத்தின் மூலமே இவ்விணைப்பை முறிக்கக் கூடியதாயிருந்தது. நிச்சியதார்த்தத்தை மேற்கொண்டவர்கள் ஒருவருடத்தின் பின்பே திருமணம் செய்து இல்லற வாழ்வை மேற்கொள்ள ஆரம்பிப்பார்கள்“ என தெரிவிக்கும் வில்லியம் பாக்ளே “மத்தேயு குறிப்பிட்டுள்ள சம்பவங்கள் அனைத்தும் நிச்சியதார்த்தத்திற்குப் பின் நடைபெற்றவைகளாகும். இதனால்தான் மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டவளாகவும், அவனது மனைவியாகவும் குறிப்பிடப்பட்டுள்ளாள். இதனாலேயே யோசேப்பு அவனது புருஷனாகவும், அவளை விவாகரத்து செய்ய சிந்தனையுள்ளனாகவும் இருந்தான் என மத்தேயு எழுதியுள்ளார்.” என கூறுகிறார்.

உண்மையில் நிச்சியதார்த்தத்தின் பின்பு மரியாள் கர்ப்பவதியாயிருப்பதை யோசேப்பு அறிந்திருப்பான். மட்டுமல்ல, அவள் வயிற்றில் வளரும் குழந்தை தன்னுடையதல்ல என்பதனாலேயே அவளைத் தள்ளிவிட யோசனையாயிருந்தான். (1:19) இச்சமயத்திலேயே, “மரியாளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்தாவியினால் உண்டானது“ என தேவதூதனால் அவனுக்கு அறிவிக்கப்பட்டது. (1:20) மரியாள் கன்னிப் பெண்ணாகவே இருந்தாள். அவள் முதற்பேறான குமாரனைப் பெறுமளவும் யோசேப்பு அவளை அறியாதிருந்தான். (1:25) எனினும் அவர்கள் நிச்சியதார்த்தம் செய்துகொண்டிருந்தமையால், அக்கால கலாச்சாரத்தின்படி கணவன்-மனைவியாக இருவரும் சமுதாயத்தினால் கருதப்பட்டமையே உறவு முறைப்பற்றி இரண்டுவிதமாக மத்தேயு எழுத காரணம் என்பதில் சந்தேகமுமில்லை.

மத்தேயுவினுடைய குறிப்பில் இயேசு யோசேப்பின் குமாரன் இல்லை என்பதற்கான இன்னுமொரு ஆதாரத்தை அவர் குறிப்பிட்டுள்ள வம்ச வரலாற்று அட்டவணையில் நாம் காணலாம். 42 பரம்பரைகளைக் கொண்ட இவ்வட்டவணையில் “பெற்றான்“ எனும் பதம் ஒவ்வொரு பரம்பரைக்கும் அதாவது ஒருவன் மற்றவனைப் பெற்றான் என்பதை சுட்டிக்காட்ட உபயோகிக்ப்பட்டதை அவதானித்திடலாம். ஆனால் இயேசுவைப் பற்றி குறிப்பிடும்போது மட்டும் யோசேப்பு அவரைப் பெற்றான் என கூறவில்லை. மாறாக, “மரியாளிடத்தில் கிறிஸ்து எனப்படுகின்ற இயேசு பிறந்தார். (1:16) என எழுதியுள்ளார். யோசேப்பு இயேசுவினுடைய தகப்பன் அல்ல என்பதை கூட்டிக் காட்டவே, இவ்விடத்தில் மட்டும் “பெற்றான்“ எனும் பதம் உபாயோகிக்கப்படவில்லை. மரியாளை இயேசுவின் தாயாக காட்டும் மத்தேயு யோசேப்பை அவருடைய தகப்பனாக காட்டவில்லை. பிறப்பைப் பொறுத்தவரையில் இயேசுவுக்கும் யோசேப்புக்குமிடையில் எவ்விதமான சம்பந்தமுமில்லை. தேவகுமாரனாகிய அவர் மரியாளின் குழந்தை, யோசேப்பின் பிள்ளையல்ல அவர், அவருடைய மாம்சமும், இரத்தமும் மரியாளிடமிருந்து பெறப்பட்டதுயன்றி, யேசேப்புக்கு இதில் எவ்விதமான பங்குமில்லை. ஏனெனில் அவர் கன்னிப் பெண்ணான மரியாளிடத்தில் பிறந்தவர்

கன்னிப் பிறப்பை பற்றிய மத்தேயுவினுடைய குறிப்பில் எவ்விதமான முரண்பாடும் எத்தகைய தெளிவின்மையும் இல்லை என்பதை அறிந்து கொண்டாலும் இதை லூக்காவின் குறிப்புகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இரண்டும் ஒருசில இடங்களில் வித்தியாசப்படுவது போல தென்படுவதை அவதானிக்கலாம். எனினும் இவை இரண்டிற்கும் எவ்வித முரண்பாடும் இல்லை என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. மத்தேயு எழுதாமல் விட்டதை லூக்கா எழுதியுள்ளாதே தவிர, மத்தேயு எழுதியற்றை முரண்படுத்தும் விதத்திலோ அல்லது பொய்யாக்கும் விதத்திலோ அவர் எதையும் எழுதவில்லை. இயேசுவினுடைய பிறப்பில் யோசேப்புடன் சம்பந்தப்பட்ட விடயங்களை மத்தேயு எழுதுகையில் லூக்கா, மரியாளுடைய வரலாற்றை எழுதியுள்ளார். இரண்டையும் ஒன்றாக்கும்போது முழுமையான சத்தியத்தை அறிந்துகொளள்க் கூடியதாய் உள்ளது.

நாணயத்தில் 'கிராஸ்'- ஆர்எஸ்எஸ் அலறல்


நமது இந்திய ரிசர்வ் வங்கி புதிதாக வெளியிட்டுள்ள ரூ.2 நாணயத்தின் ஒரு பக்கத்தில் கூட்டல் போன்ற ஒரு அடையாளம் பொறிக்கப்பட்டுள்ளது. இதற்கு ரிசர்வ் வங்கி, ஒற்றுமையின் சின்னம் என கூறியுள்ளது. 

ஆனால் சங் பரிவார் அமைப்புகள் இது கிறிஸ்துவர்களின் சிலுவை சின்னம் எனவே இதை திரும்ப பெற வேண்டும் என் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து ஆர்எஸ்எஸ் தலைவர் சுதர்ஷன் இவ்வாறு கூறுகிறார்:-

இந்த நாணயத்தில் சிலுவை பொறிக்க சொன்னது யார், இதன் பின்னணியில் யார் உள்ளனர் என நாட்டு மக்களுக்கு ரிசர்வ் வங்கி தெரிவிக்க வேண்டும்.( நீங்க வழக்கமா சொல்ற மாதிரி இது பின்னாடி போப் தான் இருக்கிறார்ன்னு சொல்ல வேண்டியதுதானே!) கிறிஸ்துவத்தை வளர்ப்பதற்காக தான் இந்த சின்னத்தை பொறித்ததாக ஆர்எஸ்எஸ் கருதுகிறது.(இப்படி எல்லாம் கிறிஸ்துவத்தை வளர்க முடியாதுங்க.) எனவே இந்த ரூ.2 நாணயத்தை திரும்ப பெற வேண்டும் என்றார்.

ஆர்எஸ்எஸ் செய்தி தொடர்பாளர் ராம்மாதவ் கூறுகையில்,

ரோம் நகர பேரரசர் லூயிஸ் வெளியிட்ட நாணயத்தில் இதே போல் சிலுவை அடையாளமும் 4 புள்ளிகளும் இடம்பெற்றிருந்தது. இந்த 4 புள்ளிகள் பைபிளில் உள்ள 4 அதிகாரங்களை குறிப்பதாகும்.(ரெம்ப புசா இருக்கே)

எனவே இந்த நாணயங்களை திரும்ப பெறவேண்டும் என்றார்.

இது என் கருத்து:-

இது வரை நான் அந்த நாணயத்தை பார்க்கவில்லை, இருந்தாலும் கூட்டல் போன்ற அடையாளம் இருப்பதால் அது சிலவை ஆகிவிடாது. இது கூட்டல் + இது சிலுவை ✝ , சிலுவையில் வரும் நேர் கோடு சற்று நிளமாக இருக்கும். நம் மருத்துவர்கள் பயன்படுத்தும் சின்னம்கூட சிலுவை மாதிரி இருக்கும். இதற்கு எல்லாம போராட்டமா, சுதர்ஷன் ஐயா உங்களுக்கு வேறு வேலையே கிடையாதா? போங்க.., போயி... வேண்டாம் எதுக்கு வம்பு. 

Tuesday, September 20, 2011

WHAT IS THE WAR OF GOG AND MAGOG? Part Three -- the good news

  1. As the forces of the Russian dictator (Gog) and his military coalition -- including Iran, Libya, Algeria, Sudan, Turkey and other key Islamic nations -- converges against the State of Israel in the last days, the Hebrew Prophet Ezekiel tells us that at the last moment when there seems to be know hope for Israeli Jews the God of Abraham, Isaac and Jacob is going to supernaturally intervene.
  2. Ezekiel 38:18-19 -- "'It will come about on that day, when Gog comes against the land of Israel," declares the Lord God, 'that My fury will mounty up in My anger. In My zeal and in My blazing wrath I declare that on that day there will surely be a great earthquake in the land of Israel."
  3. Ezekiel tells us that this earthquake will shake the entire globe and "all the men who are on the face of the earth will shake at My presence" (38:20).
  4. The enemy forces will become so frightened and disoriented that they will turn and starting fighting each other (38:21).
  5. Terrible diseases (pestilence) will start to spread through the enemy forces (38:21).
  6. As God judges these enemies of Israel, the text says He "will rain on him [Gog] and on his troops, and on the many peoples who are with him, a torrential rain, with hailstones, fire, and brimstone." (38:22)
  7. The Lord also says "I will send fire upon Magog and those who inhabit the coast lands in safety." (39:6) In other words, parts of Russia and other enemy countries will be devastated by fire from heaven.
  8. The Bible does not tell us exactly how this will happen, but it clearly describes a supernatural judgment. This is not a war started by the Israeli Defense Forces. These are not missiles from the Israeli Air Force. There no evidence in the text of Israelis defending themselves. Perhaps they are engaging in diplomacy. Perhaps they are hoping for the U.S. or the U.N. other nations to intervene. Whatever the case, the God of Israel steps in and defends Israel Himself, raining fire and brimstone down on the enemy forces and utterly destroying them.
  9. Why does the Lord act? The Lord tells us directly in 38:23, "I will magnify Myself, sanctify Myself, and make Myself known in the sight of many nations; and they will know that I am the Lord." The nations have forgotten that God does love the Jewish people. He does love the nation of Israel. They are not perfect, but He loves them and has made promises to them and He intends to keep those promises. And He wants the rest of the world to know there is a God in Israel.
  10. The devasation is so horrific that chapter 39 tells us it takes the Israelis seven months to bury all the bodies of the enemy forces (39:12-16).
  11. Ezekiel tells us it would probably take longer than seven months but the birds of the air and the beasts of the field eat many of the bodies (39:17-20)
  12. Sin has consequences. God said in Genesis 12:1-3 that those who bless the children of Abraham will be blessed, but those who curse them will be cursed. God is patient. He is slow to anger. But when pushed to far, He will act against those who hate the Jewish people and seek to rob, kill and destroy them. Let the nations be warned.
  13. There is more to the story, however. Not only will the "War of Gog and Magog" be a day of great judgment; it will also be a day of great mercy. The Bible says that the militaries of these enemies will be destroyed. There are hints here and in other texts (Jeremiah 49, for example) that the governments of these countries will be judged, as well. But God is not going to wipe out all the people of these enemy countries. To the contrary, He wants them to see His glory and His mercy.
  14. Ezekiel 39:21 -- "I will set My glory among the nations; and all the nations will see My judgment which I have executed and My hand which I have laid on them."
  15. Did you catch that? "All" the nations will "see" God's glory and judgment. Today, we are living in the first generation in human history where because of the miracle of global satellite television technology people in every country on the planet will be able to watch the prophecies of the Bible come true before their very eyes.
  16. As a result, I believe Ezekiel 38-39 describes the end of Radical Islam -- and effectively the end of all of Islam -- as we have known it. When the God of Israel destroys the forces of Radical Islam supernaturally while Muslims watch on Al Jazeera, how will they wake up the day after and believe that the Qur'an is true and that Muhammad is a true prophet? The vast majority of Muslims will abandon Islam. Many will turn to faith in Jesus Christ. Not all, of course, but many will because they will have seen the Word of God come true right in front of them and the Word was God and the Word is God and the Word became flesh and dwelt among us and His name is Jesus the Messiah. (John chapter 1)
  17. Israelis will feel very afraid and very much alone right up until the Lord shows His mighty hand. But then even those who are secular will know their is a God in heaven.
  18. Ezekiel 39:22 -- "And the house of Israel will know that I am the Lord their God from that day onward."
  19. Ezekiel 39:25-26,28 -- "Therefore, thus says the Lord God, 'Now I will restore the fortunes of Jacob and have mercy on the whole house of Israel; and I will be jealous for My holy name. They will forget their treachery which they perpetrated against Me, when they live securely on their own land with no one to make them afraid....Then they will know that I am the Lord their God because I made them go into exile among the nations, and then gathered them again to their own land and I will leave none of them there any longer.'"
  20. On top of all this, the Lord says He will no longer hide His face from the Jewish people and, in fact, will pour out His Holy Spirit upon them. "I will not hide My face from them any longer, for I will have poured out My Spirit on the house of Israel, declares the Lord." (39:29)
  21. As a result, many Jews will come to faith in Jesus as Messiah, for that is the role of the Holy Spirit is to reveal the true identity of Jesus to people. Jesus said in John 14:26, "The Helper, the Holy Spirit, whom the Father will send in My name, He will teach you all things, and bring to your remembrance all that I said to you." Not all Jews will come to faith in Jesus at that time, but many will because the Father will pour out His Holy Spirit on the house of Israel.
  22. While we know these events will all happen in the "last days" (38:16), we cannot determine whether the "War of Gog and Magog" will happen before the Rapture (when the Lord suddenly snatches born again believers in Jesus off of the earth, prior to the Tribulation) or not, because the text does not tell us one way or the other.
  23. That said, I believe it is very possible -- not certain, but very possible -- that these events will unfold within this generation, and possibly quite soon. We are certainly seeing geopolitical events unfolding in a way consistent with Ezekiel 38-39.
  24. Therefore, the most important question we must ask is this: Since the Lord in Ezekiel 38:7 told Gog, the enemy of Israel, to "get ready, be prepared," then what should Israelis themselves and friends of Israel be doing?
  25. Shouldn't we, too, get ready and be prepared -- spiritually, emotionally, physically, financially, and in every other possible way?
  26. These prophecies are some of the most interesting and important descriptions of End Times events in all of the Bible. Unfortunately, too few people in the world are aware of them, or have read them, much less studied them carefully.
  27. May the Lord bless you and reveal Himself and His heart to you as you get yourself ready for the prophecies coming our way.

WHAT IS THE WAR OF GOG AND MAGOG? Part Two. As we remember Israel's 63rd Day of Independence, is this prophetic war close at hand?


As nearly eight million Israelis are celebrating this week the 63rd birthday of the modern State of Israel, there are real questions in the region about how much longer the Jewish State can and will survive. A growing number of Radical Islamic leaders are declaring that Israel will soon be "wiped off the map," and are vowing to assist in that effort. Iran is feverishly trying to build nuclear weapons and the ballistic missiles to deliver them. Hezbollah in Lebanon has built up a force of more than 40,000 rockets aimed at Israel. The bloodthirsty regime in Syria is slaughtering opponents of the regime while buying weapons systems aimed at Israel. Egypt's Muslim Brotherhood is rapidly rising in power and the current presidential candidate front-runners in Egypt are speaking with growing hostility towards the Jewish State. Fatah has chosen to make peace with the Hamas terrorist organization rather than with Israel. Meanwhile, a growing number of Orthodox rabbis in Israel believe recent events are indicators that the "War of Gog and Magog" is coming soon. A growing number of Christians around the world think the "War of Gog and Magog" is coming soon, as well. Are they right?
Let's look at what the Bible teaches.
  1. The Hebrew Prophet Ezekiel describes a Russian dictator (Gog) who will form a military coalition with Iran, Sudan, Libya, Algeria, Turkey and a group of other North African, Middle Eastern and Central Asian countries in "the last days" (Ezekiel 38:16). In the days of Ezekiel, of course, there was no Islam. Today we know that most of the nations Ezekiel mentions are majority Muslim countries, and Russia is about 20% Muslim and increasingly allied with Radicalized Islamic countries.
  2. The Bible explains very clearly that the target of this military coalition in the End Times will be Israel.
  3. Ezekiel 38:8 says "in the latter years, you [Gog and his coalition] will come into the land that is restored from the sword, whose inhabitants have been gathered from many nations to the mountains of Israel which had been a continual waste; but its people were brought out from the nations and they are living securely, all of them."
  4. Ezekiel 38:16 says that the coalition "will come up against My people Israel" and that "it shall come about in the last days that I will bring you [Gog] against My land."
  5. Ezekiel 39:2 says that Gog will come "from the remotest parts of the north...against the mountains of Israel."
  6. Clearly, then, the main pre-requisite for this prophecy regarding the "War of Gog and Magog" to come true is that the State of Israel has to be prophetically reborn in the last days. Indeed, this is what the prophecies of Ezekiel chapters 36 and 37 describe in detail.
  7. The Lord showed Ezekiel that Jews would living in exile,  scattered throughout the world because of sin and disobedience to the God of Abraham, Isaac and Jacob (Ezekiel 36:16-21).
  8. But solely because of His grace and mercy, the Lord promised to regather the Jewish people to the land of Israel.
  9. The Lord promised that "I will cause men -- My people Israel -- to walk on you and possess you" (Ezekiel 36:12). 
  10. The Lord said that the Jewish people would rebuild the ancient ruins and the "waste places" (Ezekiel 36:10).
  11. The Lord said that the land and "mountains of Israel" at that time would "put forth [their] branches" and bear fruit for "My people Israel." (Ezekiel 36:8)
  12. The Lord said that first the physical restoration of Israel and the Jewish return to the Land would be set into motion (Ezekiel 37:4-8)
  13. After the physical restoration of the State of Israel began, then the spiritual restoration of the Jewish people would be set into motion (Ezekiel 37:9-14).
  14. Then, once Israel was reestablished as a State, and the Jewish people were being regathered to the Land, and the Lord was drawing the Jewish people back into a relationship with Him, and Israel was living securely in the Land (Ezekiel 38:8) with a degree of prosperity even (Ezekiel 38:12), then -- and only then -- would the Russian-Iranian coalition be set into motion to rob, kill and destroy Israel and the Jewish people.
  15. It should be noted that Ezekiel does not describe Israel having "peace." Rather, twice Israel is described as "living securely" (Ezekiel 38:8 and 38:11).
  16. I recognize that these verses can be difficult for some Palestinian Arabs and some Israeli Arabs to read, whether they are born again Christians or nominal Christians (raised in churches but without a personal relationship with Jesus Christ), and especially if they are Muslims. The Bible indicates that Jews will be a sinful people when they are brought back into the Land. Only after they return, the Bible teaches, will the Holy Spirit be poured out upon Jews and they will repent and return to a personal relationship with the King of kings and Lord of lords. Jesus said in Matthew 24 and Luke 21 that there would be "wars and rumors of wars" and "revolutions" and "lawlessness" in the last days. Certainly, the rebirth of Israel -- while prophetic and God-ordained -- has come with wars, rumors of war, revolutions, sins, and crimes committed by Arabs as well as Jews. The Bible doesn't teach this period of the last days will be easy, and the Bible is right.
  17. That said, we would be not be honest to the Word of God if we were to ignore, deny or try to explain away the plain meaning of these verses. The Bible told us well in advance that Israel would be reborn and the Jews would come back to the Land, and this has come to pass. Genesis 12:1-3 tells us that the Lord will bless those who bless the children of Abraham, and He will curse those who curse the children of Abraham. Those who have cursed Israel have, sadly, found themselves facing great pain and suffering. Sometimes Bible truths are difficult to accept, but they are true nonetheless and we must accept them by faith.
  18. At the same time, while the Bible clearly explains that the Lord will bring the Jewish people back to the Land of Israel and allow them to reclaim their God-given ownership of the Land, nowhere in the Bible are Jews given a license to commit injustice. To the contrary, the Bible teaches Israel to love her neighbors (Leviticus 19:18 and Matthew 19:19). The Bible also teaches Israel to love her neighbors and pray for those who persecute them (Matthew 5:44).
  19. Those of us who are followers of Jesus Christ need to teach sound Bible doctrine regarding Israel and the Palestinians. We need to love both, bless both, pray for both. Moreover, we need to stand with and encourage our brothers and sisters in the Messiah whether they are Jewish or Arab. The Bible gives us no freedom to ignore, deny, or oppose our brothers and sisters on either side. Rather, Jesus said "blessed are the peacemakers" (Matthew 5:9). We need to be pro-actively building relationships with Israelis and Palestinians and being ambassadors of Christ and agents of reconciliation whenever and wherever possible.
  20. We do not have to agree with everything that our brothers and sisters believe -- especially if those beliefs are unscriptural -- but we are commanded to love them unconditionally and sacrificially. After all, Jesus said, "A new commandment I give to you, that you love one another, even as I have loved you, that you also love one another. By this all men will know that you are My disciples, if you have love for one another." (John 13:34-35)
  21. Now, back to the prophecy and its analysis: It could be reasonably argued that Israel is living more securely today than at any other time in its 63 years. The Israeli Defense Forces are widely considered the strongest and most effective ground fighting force in the Middle East. The Israeli Air Force is widely considered dominant in the skies. Israel has peace treaties with two major neighbors, Egypt and Jordan (though the future of the treaty with Egypt is increasingly in question). Yasser Arafat is gone. Saddam Hussein is gone. Osama bin Laden is gone. Palestinian suicide bombings are not a daily part of Israeli life since 2004. Rockets are occassionally fired from Gaza at Israeli civilians living in the south, but this is not nearly as bad as it was prior to Operation Cast Lead in January 2009. Moreover, Israel has just deployed a short-range rocket defense system called "Iron Dome" that is very effective. Meanwhile, Israel has submarines, ballistic missiles, and first rate intelligence services in her defense. Israel has also enjoyed decades of a close strategic partnership with the United States, has a strong and vibrant economy, and is widely believed to have defensive nuclear weapons, though the government maintains a policy of "strategic ambiguity" on the subject, neither confirming nor denying the existence of those weapons.
  22. Could Israel currently be secure enough to fulfill this prophetic prerequisite? Honestly, I am not sure. Perhaps events soon will lead Israelis to being and feeling even more secure. But there is no question that even with emerging new threats on the horizon, Israelis feel more secure today than ever before its their modern State's existence.
  23. Given the fact that the major End Times prophecies of Ezekiel 36 and 37 have essentially come true in our lifetime, does this mean that we will see Ezekiel 38 and 39 come true in our lifetime as well? To me, it is too soon to say so definitively. Certainly we are seeing geopolitical events unfold in recent decades and in recent years that are strikingly consistent with what the Bible describes as preparations essential for the "War of Gog and Magog." So we should be ready. We should be prepared -- not caught off guard -- if events accelerate in the near future. But we must also remember that the Lord in His sovereignty could also decide to delay events for quite some time for His own purposes.
  24. That said, it should be noted that when the Russian dictator finishes building his military coalition in Israel and begins to move his forces to surround Israel in the "last days," Ezekiel gives us no indication that any country will come to Israel's defense. There are not indications that the United Nations, or the European Union, or NATO will defend Israel. Nor is there any indication that the United States will defend Israel. Rather, Israel will be -- and will feel -- all alone in the world.